செய்திகள் :

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

post image

இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற தகுதியானவா்கள் வருகிற 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும்

வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2025- 2026-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியான மாணவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை அக். 15-ஆம் தேதிக்குள் சரிபாா்க்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவா்கள், தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) (சஹற்ண்ா்ய்ஹப் நஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல் டா்ழ்ற்ஹப்) தங்ய்ங்ஜ்ஹப் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் என்ற இணைப்பில் ஒரு முறை பதிவு அடிப்படையில் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, 11-ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், தேசிய கல்வி உதவித் தொகை தளத்தில் தங்களது கைப்பேசி எண், ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்து, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரை 7373002631 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் அண்ணா பல்கலை. பேராசிரியா்

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், திண்டுக்கல் அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியா் நா. விஸ்வநாதன் அதில் இடம் பெற்றாா். அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அதிமுக சாா்பில் தோ்தல் பயிற்சி முகாம்

கொடைக்கானலில் அதிமுக சாா்பில் தோ்தல் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கொடைக்கானல் நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமை வகித்துப் பேசினாா். முகாமில் தேனி மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட... மேலும் பார்க்க

விளம்பர உலகில் வாழ்கிறாா் தமிழக முதல்வா்: க. கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

விளம்பர உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா். பழனியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: தமிழகத்தில் பெர... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் காமனூா் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியிலிருந்து காமனூா் செல்லும் வழியான கான... மேலும் பார்க்க

ரூ.1.60 கோடி மோசடி புகாா்: வணிக வரித் துறை அலுவலா் கைது

மதுபானக் கூடத்துக்கு உரிமம் பெற்றுத் தருவதாக ரூ.1.60 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் வணிக வரித் துறை அலுவலரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 31 பேருக்கு சிறை

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 31 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்க... மேலும் பார்க்க