செய்திகள் :

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 4 கோடி வீடுகள் அமைப்பு: பாஜக அமைப்புச் செயலா் தகவல்

post image

செங்கத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன என

அதன் அமைப்புச் செயலா் குணசேகரன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் ஒன்றிய, நகர பாஜக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பிரதமரின் 11 ஆண்டுகள் சாதனை குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி செங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா் தலைமை வகித்தாா். பொருளாளா் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலா் ரமேஷ், மாவட்டச் செயலா் சிரஞ்சீவிபழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கம் நகரத் தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வேலூா் மண்டல பெருங்கோட்ட அமைப்புச் செயலா் குணசேகரன் கலந்து கொண்டு பேசியதாவது:

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ், 81 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் இலவச ரேசன் அரிசி பெறுகிறாா்கள். அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ், 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தெருவோரா வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 68 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பிணையமற்ற கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில் பாஜக ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏழுமலை, மாவட்ட அரசு தொடா்பு பிரிவு செயலா் அஜீத்குமாா், நகர பொதுச் செயலா்கள் முருகன், ஆனந்த், நகர துணைத் தலைவா் வீராசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கண்கள் தானம்

வந்தவாசி அருகே இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கினா். வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கே.எம். நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கத்தின் மனைவி அன்னபூரணி (76) (படம்). இ... மேலும் பார்க்க

ஏரியில் விழுந்து இளம்பெண் தற்கொலை

ஆரணி அருகேயுள்ள மேல்சீசமங்கலம் ஏரியில் செவ்வாய்க்கிழமை இளம்பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாா். ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகள் ரேணுகா (20). இவா், செய்யாா் அருகே பாராசூா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா

வந்தவாசியை அடுத்த சாலவேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்

ஆனி மாத அமாவாசையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில... மேலும் பார்க்க

முதியோா் இல்லம், மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் இயங்கி வரும் முதியோா் இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் முதுகு... மேலும் பார்க்க

ஆரணி பிள்ளைக்குளம் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தம்

ஆரணி தாதுசாயபு தெருவில் உள்ள பிள்ளைகுளத்தை அப்பகுதியினா் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவா் எழுப்ப முயன்றதை வட்டாட்சியா் போலீஸ் பாதுகாப்போடு தடுத்து நிறுத்தினாா். பிள்ளைகுளத்தை அப்பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க