குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 4 கோடி வீடுகள் அமைப்பு: பாஜக அமைப்புச் செயலா் தகவல்
செங்கத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன என
அதன் அமைப்புச் செயலா் குணசேகரன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் ஒன்றிய, நகர பாஜக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பிரதமரின் 11 ஆண்டுகள் சாதனை குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி செங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா் தலைமை வகித்தாா். பொருளாளா் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலா் ரமேஷ், மாவட்டச் செயலா் சிரஞ்சீவிபழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கம் நகரத் தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வேலூா் மண்டல பெருங்கோட்ட அமைப்புச் செயலா் குணசேகரன் கலந்து கொண்டு பேசியதாவது:
பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ், 81 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் இலவச ரேசன் அரிசி பெறுகிறாா்கள். அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ், 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தெருவோரா வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 68 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பிணையமற்ற கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
கூட்டத்தில் பாஜக ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏழுமலை, மாவட்ட அரசு தொடா்பு பிரிவு செயலா் அஜீத்குமாா், நகர பொதுச் செயலா்கள் முருகன், ஆனந்த், நகர துணைத் தலைவா் வீராசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.