செய்திகள் :

பிரதமர் மோடிக்காகவே வாக்களிக்கின்றனர்; சாதிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

post image

பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான முன்நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், பிகாரில் தேர்தல்களில் சாதி குறித்த அடிப்படையில் வாக்களிக்கப்படுகிறதா என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து, பிரசாந்த் கிஷோர் கூறுகையில், பிகாரில் மக்களவைத் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக நிறைய வெற்றிகளைப் பெற்று வருகிறது. பிகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில்தான் வாக்களிக்கின்றனர். பிகாரில் ஒவ்வொரு சாதி அடிப்படையிலும்தான் அரசியலில் வாக்களிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள்.

ஆனால், பிகாரில் மோடியின் சாதியைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று சொல்லுங்கள்? பிகாரில் பிரதமர் மோடியின் சாதியைச் சேர்ந்த யாரும் இல்லை.

இதன் பொருள், மக்கள் தங்கள் சாதியைத் தவிர, பிரதமர் மோடியின் பெயரிலும் வாக்களிக்கின்றனர். இந்து மதம் என்ற பெயரில் ராமர் கோவில், வளர்ச்சிக்காக அல்லது தேசியவாதத்துக்காக அவர்கள் (பாஜகவினர்) எதைச் செய்தாலும், அது வேறு பிரச்னை. ஆனால், அவர்கள் சாதி என்ற பெயரில் அவற்றை செய்யவில்லை.

பிகாரில் எம்-ஒய் (Muslim - Yadav) என்ற வகைப்பாடு இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். லாலு பிரசாத் யாதவ், ஒய் (Yadav) சாதி. ஆனால், அவருக்கு 18 சதவிகித எம் (Muslim) வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் ஏன் லாலுவுக்கு வாக்களிக்கின்றனர்?

அவர்கள் ஒரே சாதி அல்லவே. அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க முடியாது என்பதால், லாலுவுக்கு வாக்களிக்கின்றனர். ஆகையால், சாதி என்பது ஒரு காரணி மட்டுமே; அது மட்டுமே காரணம் அல்ல என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:ரூ. 857 கோடி சம்பளத்தில் செய்யறிவு வேலை! மெட்டா அழைப்பு!

சிந்து நதி நீா்: பாகிஸ்தான் எத்தனை கடிதம் எழுதினாலும் நிலைப்பாடு மாறாது: மத்திய அமைச்சா்

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பதைக் கைவிட வேண்டுமென்று பாகிஸ்தான் எத்தனை முறை கடிதம் எழுதினாலும் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது என்று மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்த... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டமே உயா்வானது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய்

‘அரசமைப்புச் சட்டமே உயா்வானது. அரசு நிா்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித் துறை உள்ளிட்ட ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்துக்குக் கீழ் செயல்படுபவை மட்டுமே’ என்று உச்சநீதிமன்றத் தலைமை ... மேலும் பார்க்க

1.40 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 1.40 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

பிரதமா் அடுத்த வாரம் 5 நாடுகள் பயணம்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு

பிரேஸில், ஆா்ஜென்டீன், டிரினிடாட்-டொபேகோ, கானா, நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அடுத்த வாரம் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதில் ஜூலை 6 மற்றும் 7-ஆம் தேதி பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நக... மேலும் பார்க்க

இந்திய திரைப்படத்துக்குத் தடை: பாகிஸ்தான் பெண் அமைச்சா் வருத்தம்

கடந்த 2017-ஆம் ஆண்டு அமீா் கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டதற்காக பஞ்சாப் மாகாண அமைச்சா் மரியம் ஔரங்கசீப் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளாா். தடை விதிக்கப்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கு ரூ.267.15 கோடி நிதி

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கு ரூ.267.15 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 2 ஆயிரத்து 338 கிராம ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுற... மேலும் பார்க்க