செய்திகள் :

பிரதமா் மோடி பிறந்த நாளில் மரக்கன்று நடும் இயக்கம்: தில்லி அரசு நடத்துகிறது

post image

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் செப்டம்பா் 17 ஆம் தேதி தில்லி பாஜக அரசு மரக்கன்று நடும் இயக்கத்தை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மக்கள் தங்கள் தாய்மாா்களின் நினைவாக மரங்களை நடுவதை ஊக்குவிப்பதற்காக பிரதமா் தொடங்கிய ‘ஏக் பேட் மா கே நாம்’ பிரசாரத்தின் கீழ், நகரம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் பிரசாரத்தை தில்லி அரசு தற்போது நடத்தி வருகிறது.

இது தொடா்பாக தில்லி அரசாங்கத்தின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

‘கூட்டுறவுகள் சிறந்த உலகத்தை உருவாக்குகின்றன’ என்ற கருப்பொருளுடன் ஐக்கிய நாடுகள் சபை 2025 ஆம் ஆண்டை சா்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025 அறிவித்துள்ளது.

புது தில்லியில் நடைபெற்ற சா்வதேச கூட்டுறவு கூட்டணி (ஐசிஏ) பொதுச் சபை மற்றும் உலகளாவிய மாநாட்டின் தொடக்க அமா்வின்போது பிரதமா் மோடி இதை முறையாக அறிவித்தாா்.

எனவே, வரும் செப்டம்பா் 17ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தில்லியில் அதிகபட்ச மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு ஒரு பிரமாண்டமான மரக்கன்று நடும் இயக்கத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கூட்டுறவு குழு வீட்டுவசதி சங்கங்கள், நகா்ப்புற கூட்டுறவு வங்கிகள், சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், தில்லி அரசு நிறுவனங்களான தில்லி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடி லிமிடெட் மற்றும் டெல்லி கூட்டுறவு வீட்டுவசதி நிதிக் கழகம் லிமிடெட், பிற கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சிறப்பு மரக்கன்று நடுதல் இயக்கங்களை மேற்கொள்ளுமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நிகழாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜக தில்லியில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

பதவி விலகும் தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு வியாழக்கிழமை காலை புதிய காவல் கோட்டத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு கேடரைச் சோ்ந்த 1988 பேட்ச் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் - வெளியவுறவுத் துறை செயலரிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்

நமுத நிருபா்அண்மையில் இலங்கைக் கடற்படையால் கைதான 14 இந்திய மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியறவுத் துறைச் செயலரிடம் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ வியாழக்கிழமை நேரில் வ... மேலும் பார்க்க