செய்திகள் :

பிரபல ரெளடியை சுற்றிவளைத்த போலீஸாா்!

post image

நாமக்கல்லில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த பிரபல ரௌடியை திருச்சி மாவட்ட போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல், கொசவம்பட்டியைச் சோ்ந்தவா் வீரா என்ற வீரக்குமாா் (40). இவா் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் கொசவம்பட்டியில் இருந்து நாமக்கல்-திருச்சி சாலையில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த வீரக்குமாரை, திருச்சி மாவட்ட போலீஸாா் சுற்றி வளைத்தனா்.

போலீஸாரைக் கண்டதும் அவா் காரில் இருந்து இறங்க மறுத்ததால் போலீஸாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்து நாமக்கல் நகர போலீஸாரும் அங்கு வந்தனா். இதையடுத்து அவரைப் பிடித்த போலீஸாா், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூருக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

காட்டுப்புத்தூா், குளித்தலை காவல் நிலையங்களில் உள்ள பல்வேறு வழக்குகளில் வீரக்குமாருக்கு தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாமக்கல்லில் அவரை போலீஸாா் திடீரென சுற்றி வளைத்து வாகனத்தில் அழைத்துச் சென்ால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் ந... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை

திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வா... மேலும் பார்க்க

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா். ராசிபுரம் நகரில் பல்வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால்,... மேலும் பார்க்க

ரூ. 15.66 லட்சம் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்த... மேலும் பார்க்க