செய்திகள் :

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்

post image

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ரூப் கம்பெனி-க்கு வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து உருவாக்கிய சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவா் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநா் தி.அா்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் அண்ட் ரூப் கம்பெனி-யின் பொறியியல் குழு பொது மேலாளா் சஞ்சய் பட்டாசாா்யா ஆகியோா், சென்னையிலுள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

6.484 ஏக்கா் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகக் கட்டடம், மொத்தம் 1,08,290.01 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்டது. இதில் இரண்டு அடித்தள நிலைகள், ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் இருக்கும்.

அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்படும் பேருந்து முனையத்தின் பணிகளை 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதற்கு மேலே உள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் மற்றும் குறளகம் கட்டடப் பணிகள் 30 மாதங்களுக்குள் நிறைவடையும் என சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க