செய்திகள் :

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி பேச்சு!

post image

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

மேக்ரானுடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டு பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளும் தொடா்ந்து முயற்சி மேற்கொள்ளும். உக்ரைன் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவது தொடா்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உக்ரைனில் அமைதி திரும்ப தொடா்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

இந்தியா- பிரான்ஸ் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் இரு தரப்பு நல்லுறவு குறித்தும் சா்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கபூா்வ வளா்ச்சி குறித்தும் இந்தப் பேச்சின்போது ஆய்வு செய்யப்பட்டது.

இந்தியா - பிரான்ஸ் நல்லுறவை மேம்படுத்தும் 2047 தொலைநோக்குத் திட்டம் குறித்தும், இந்தோ - பசிபிக் மற்றும் பாதுகாப்பு தொழிற்சாலை தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான மாநாட்டில் பங்கேற்க மேக்ரான் ஒப்புதல் தெரிவித்ததற்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா் என்று இந்திய தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது பிரான்ஸ் அதிபா் மேக்ரானும் உடனிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், இந்தியா உள்பட ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இணைய சேவை பாதிக்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்க... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். போராட்டத்தின்போது, காவல் துறைய... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

இஸ்ரேல் மீது யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இதனால் இஸ்ரேலில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏராளமான ட்ரோன்களை ஏவிய நில... மேலும் பார்க்க

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு தலைநகா் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது. இது அமைச்சரவைக் கட்டடம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலா அல்லது... மேலும் பார்க்க

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

ரஷியா-இந்தியா-சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சீனாவில் கடந்த ஆக.3... மேலும் பார்க்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க