செய்திகள் :

பிரிட்டன் - இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான படத்தை வெளியிட தணிக்கை வாரியம் தடை!

post image

உலகத் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘சந்தோஷ்’ திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.

பிரிட்டன் - இந்திய திரைப்பட இயக்குநரான சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் ‘சந்தோஷ்’. இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்தப் படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பிரிட்டன் சார்பில் அனுப்பப்பட்டது.

இந்தியாவை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் வட இந்தியாவில் காவல்துறையில் இணையும் விதவை பெண், ஒரு தலித் சிறுமியின் கொலையை விசாரிப்பது பற்றியும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பேசியுள்ளது. இதில், சஹானா கோஸ்வாமி நடித்துள்ளார்.

இந்த நிலையில், சந்தோஷ் திரைப்படத்தை இந்தியத் திரையரங்கங்களில் வெளியிட மத்திய தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.

இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பெண் வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பு, காவல்துறையின் வன்முறை தொடர்பான சித்தரிப்புகள் ஆகியவற்றை பிரச்னைக்குரியதாக தணிக்கை வாரியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த முடிவு தனக்கு மிகவும் ஏமாற்றம் மற்றும் மனவேதனை அளிப்பதாகக் கூறிய படத்தின் இயக்குநர் சந்தியா சூரி, “இது எங்கள் குழுவினருக்கு மிகவும் ஆச்சரியமானதாக இருக்கின்றது. ஏனென்றால், இதுபோன்ற விஷயங்கள் இந்திய சினிமாவுக்கு புதிதல்ல. இதற்கு முன்னர் வெளியான படங்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் எழுப்பப்பட்டுள்ளதா?

காவல்துறையினர் பற்றி எடுக்கப்பட்ட மற்ற படங்களைப் போல எங்களின் படம் வன்முறையை பெருமைப்படுத்தும் விதமாக எடுக்கப்படவில்லை. இதில், பிரச்னைக்குரியதாக எதுவுமே இல்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | வீர தீர சூரன் படத்தை வெளியிட அனுமதி!

செய்யாத குற்றத்தை ஏற்பதா? கொரிய நடிகர் கண்ணீர் மல்க பேட்டி!

பிரபல தென் கொரிய நடிகர் கிம் சூ-கியுன் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட தனது முன்னாள் காதலிடனான தவறான உறவு குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். கே டிராமா எனப்படும் கொரிய மொழிப் படங்களுக்கு தமிழகத்தில் நல்... மேலும் பார்க்க

சுந்தர்.சி, வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்!

கேங்கரஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில... மேலும் பார்க்க

வீர மகாகாளியம்மன் கோயிலில் திருநடனத் திருவிழா: திரளானோர் பங்கேற்பு!

வீர மகாகாளியம்மன் கோயிலில் 56-ஆம் ஆண்டு திருநடனத் திருவிழா, படுகளம் பார்த்தல் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்... மேலும் பார்க்க

முதலிடத்தில் சிறகடிக்க ஆசை! தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள் எவை?

சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் அடிப்படையில், தமிழ்நாட்டின் சிறந்த தொடர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், சன் தொலைக்காட்சிகளின் தொடர்களை பின்னுக்குத்தள்ளி விஜய் தொலைக்காட்சியின் சிறக... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி கால அளவு இவ்வளவுதானா?

குட் பேட் அக்லி திரைப்படத்தின் கால அளவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள... மேலும் பார்க்க

2 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்த சிக்கந்தர்!

சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படம் 2 நாள்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.நடிகர் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் கடந்த மார்ச்.30இல் திரையரங்குகளில் வெளியாகியது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ... மேலும் பார்க்க