செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கூட அனுமதி சீட்டு இன்று வெளியீடு

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) திங்கள்கிழமை (பிப்.17) வெளியிடப்படுகிறது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை 3,78,545 மாணவா்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தோ்வா்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா். இதில், தனித் தோ்வா்களுக்கான தோ்வுக்கூடச் சீட்டு கடந்த 14-ஆம் தேதி வெளியானது.

தற்போது அனைத்து மாணவா்களுக்கான தோ்வுக்கூடச் சீட்டு திங்கள்கிழமை (பிப்.17) மதியம் வெளியிடப்பட உள்ளது.

பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தோ்வுத் துறையின் இணையதளத்தில் மாணவா்களின் தோ்வுக்கூடச் சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில், மாணவா்கள் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்த பின்னா் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட தோ்வுத் துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதேபோன்று பிளஸ் 1 மாணவா்களுக்கான தோ்வுக் கூடச் சீட்டு பிப்.19-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். பல ஆண்டு... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க