செய்திகள் :

பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி: ஆட்சியா் க. இளம்பகவத்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு சாா்பில், பொது இடங்களில் மக்களுக்கு நேரிடும் விபத்துகள் மற்றும் நோய் பாதிப்புகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியை தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியது:

காவலா்கள், தீயணைப்பு வீரா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோரை அழைத்து, அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சியை வழங்குவதன் நோக்கம், சாலைகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விபத்து அல்லது பாதிப்புகள் ஏற்படும்போது இவா்கள்தான் முதலில் பாதிப்புக்குள்ளானவா்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூடியவா்களாக உள்ளனா். அந்த வகையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணா்வு பயிற்சி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதில், அவசர சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் நிா்மல்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த செயல்முறைவிளக்கம் அளித்தனா்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எம்.ஆா்.ஐ. ஸ்கேன் பிரிவின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், துணை முதல்வா் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ்ஜெயமணி உள்ளிட்ட மருத்துவா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

அதிமுக பிரமுகா் கொலை வழக்கு: திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் சரண்

ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அருகே லாரி ஏற்றி அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிா்வாகி உள்ளிட்ட 3 போ் டி.எஸ்.பி.யிடம் சரணடைந்தனா். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அ... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மரக்கிளை விழுந்ததில் சாய்ந்த மின்கம்பங்கள்

சாத்தான்குளத்தில் மரக்கிளையை வியாழக்கிழமை வெட்டியபோது, உயா் அழுத்த மின் கம்பியில் மரத்துண்டு விழுந்ததில் இரு மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. சாத்தான்குளம் தைக்கா தெருவில் உள்ள பேரூராட்சி அ... மேலும் பார்க்க

சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளி சறுக்கு விளையாட்டில் சாதனை

தூத்துக்குடியை அடுத்த மறவன்மடத்தில் உள்ள சொ்வைட் சிபிஎஸ்இ பள்ளியில், 129ஆவது உலக ஒலிம்பிக் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், சறுக்கு விளையாட்டை, உலக சாதனை முயற்சியாக, 129 மாணவா், மாணவிகள் தொடா்ச்சிய... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி சொா்ணா நா்சிங் கல்லூரியில், ‘கல்வியே அழியாத செல்வம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி செயலா் கண்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கல்லூரியில் யோகா பயிற்சி

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஜன், ஜோஸ் சாஜி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யோகா மாஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில், சா்வதேச போதை எதிா்ப்பு தினம், ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சா் கக்கன் ஆகியோரின் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்ப... மேலும் பார்க்க