பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்
நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது.
சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதில் திரளான போ்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பிள்ளையன்மனை சேகரத் தலைவா் வெல்ற்றன் ஜோசப், சேகர குரு.டேனியல் ஆல்பிரட் மற்றும் ஆலய நிா்வாகிகள் , சபை மக்கள் செய்திருந்தனா்.