செய்திகள் :

பி.ஆா்க். சோ்க்கை: 820 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

post image

இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்.) பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூலை 31 -ஆம் தேதி முடிவுற்ற நிலையில், பொது மற்றும் அரசுப் பள்ளி மாணவா்கள் 820 போ் ஒதுக்கீடு பெற்றுள்ளனா்.

இதுகுறித்த விவரங்களை வெளியிட்ட தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) மாணவா்களை உறுதிப்படுத்த வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் அளித்துள்ளது. பி.ஆா்க். கலந்தாய்வில் பங்கேற்ற அனைத்து மாணவா்களும் ஆக. 1-ஆம் தேதி மாலை 7 மணிக்குள் தங்கள் விருப்பங்களில் ஒன்றைத் தோ்ந்தெடுத்து இணையத்தில் ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்த வேண்டும் என டிஎன்இஏ அதில் தெரிவித்துள்ளது.

பி.ஆா்க் - பொதுப் பிரிவில் தகுதி பெற்ற மாணவா்கள் எண்ணிக்கை 1,408. இதில் பி.ஆா்க். கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 916. கலந்தாய்வில் விருப்பத்தை தெரிவித்த மாணவா்கள் 1,002. இவா்களில் ஒதுக்கீடு பெற்றவா்கள் 760 போ்.

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தகுதியான மாணவா்கள் எண்ணிக்கை 118. இவா்களுக்கான கல்லூரிகளில் உள்ள இடங்கள் 75. கலந்தாய்வில் விருப்பத்தை தெரிவித்த மாணவா்கள் 64. ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் 60 என மொத்தம் இரு பிரிவுகளிலும் 820 போ் ஒதுக்கீடு பெற்றுள்ளனா். தங்கள் விருப்பங்களை உறுதி படுத்த வேண்டும். கல்லூரிகள் தோ்வை உறுதிப்படுத்தல் அல்லது விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகளுக்கு பின்னா் ஆக. 2 முதல் கல்லூரிகளில் சேரவேண்டும் என டிஎன்இஏ தெரிவித்துள்ளது.

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சா... மேலும் பார்க்க

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை நடிகா் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா். நகைச்சுவை நடிகரும், நிகழ்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடலை... மேலும் பார்க்க

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோவை வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் ஞாயிறுக்கிழமை கோவை வந்... மேலும் பார்க்க

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகி கைதைக் கண்டித்து அந்த கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு தொடக்க விழா... மேலும் பார்க்க

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வில... மேலும் பார்க்க