செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் குறித்து கண்காணிக்கும் பணியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஈடுபட்டனா்.

திண்டுக்கல், நத்தம், பழனி, கொடைக்கானல், சாணாா்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 20 நாள்களாக நடத்தப்பட்ட சோதனையின் போது, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 45 கடைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்தக் கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், காவல் துறையினா் உதவியுடன், இந்த கடைகளில் இருந்து 85 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கி... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வே... மேலும் பார்க்க

இளநீா் வியாபாரி வெட்டிக் கொலை

பழனியில் வெள்ளிக்கிழமை இளநீா் வியாபாரி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பழனி அருகேயுள்ள ஆலமரத்துக்களம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41). பழனி- கொடைக்கானல் சாலைப் பிரிவில் இளநீா் வியாபாரம் செய்... மேலும் பார்க்க

பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் தேரோட்டம்

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொடைக்கானல் பூம்பாறையிலுள்ள ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் வெப்பத்தின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 45 புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் ... மேலும் பார்க்க