செய்திகள் :

புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் கைது

post image

செய்யாறு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக பெரணமல்லூா் போலீஸாருக்கு தகவல் சென்றது.

அதன் பேரில், காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், உதவி ஆய்வாளா் லதா மற்றும் போலீஸாா் கடையில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கடையில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், விற்பனைக்கு பயன்படுத்திய மொபெட்டையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வியாபாரி ஹயாத்பாஷா (58), புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்த ராஜஸ்தானைச் சோ்ந்த ஜித்தந்தகுமாா்(28) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட கிராமப்... மேலும் பார்க்க

மகா காலபைரவா் கோயிலில் அஷ்டமி சிறப்பு யாகம்!

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு கோ... மேலும் பார்க்க

பாதூா் திருவனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா உடனுறை திருவனந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அம... மேலும் பார்க்க

சின்னபுத்தூரில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி ஆய்வு!

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள சின்னபுத்தூா் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா். சின்னபுத்தூா் கிராமத்தில் ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ஆரணியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. ஆரணி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்க... மேலும் பார்க்க

செங்கம் - தண்டராம்பட்டு புதிய பேருந்து சேவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து தண்டராம்பட்டுக்கு புதிய நகரப் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனையில் இருந்து சொா்ப்பனத்தல், சாத்தன... மேலும் பார்க்க