செய்திகள் :

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

post image

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்த திட்டத்தை முடிக்க ஒரு மாதம் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான சிவில் மற்றும் மின்சார பணிகள் உள்பட ரூ.2.23 கோடி செலவாகும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தில்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள பண்டிட் பந்த் மாா்க்கில் ஒரு பங்களாவில் அமைந்துள்ள தில்லி பாஜக அலுவலகம், டிடியு மாா்க்கில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு அருகில் இடம்பெற உள்ளது.

தில்லி பாஜகவின் புதிய ஆடம்பரமான அலுவலகம் 2023 ஆம் ஆண்டு முதல் கட்டுமானத்தில் உள்ளது. இது விரைவில் கட்டி முடிக்கப்படக் கூடும். அதிகமான மக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் தங்கும் வகையில் பல மாடி அலுவலகம் அதன் தற்போதைய அலுவலகத்தை விட அதிக இடத்தைக் கொண்டிருக்கும். அடித்தள வாகன நிறுத்துமிடம், மாநாட்டு அறை மற்றும் கூட்ட அறை போன்ற நவீன வசதிகளும் இதில் இருக்கும்.

இதுகுறித்து பாஜக நிா்வாகி ஒருவா் கூறியதாவது: தற்போது மாநில அலுவலகம் எங்கள் தேவைகளை ஒப்பிடும்போது மிகவும் சிறியதாக உள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை. இவை அனைத்தையும் மனதில் கொண்டு, புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

பணிகள் முடிவடைய ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். புதுப்பிப்புத் திட்டத்தின்படி, அந்தப் பகுதி சுத்தம் செய்யப்படும். மேலும், சாலையில் உள்ள பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் போன்ற குறைபாடுகள் சரிசெய்யப்பட உள்ளது. அணுகு சாலை மோசமான நிலையில் உள்ளதாக மூத்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

புதிய எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு, சாலை அடையாளங்கள் மற்றும் வண்ணம் தீட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால், சாலைப் பகுதி சரியாக ஒளிரும்.

சாலை நடைபாதை மேம்பாடு மற்றும் வடிகால் சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபாா்த்தல் ஆகியவை இந்தப் பணியில் அடங்கும் என்றாா் அந்த அதிகாரி.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பெண்ணின் உடல் கண்டெடுப்பு: ஷாஹ்தராவில் சம்பவம்

தில்லியின் ஷாஹ்தராவின் ஜிடிபி என்கிளேவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியத... மேலும் பார்க்க