செய்திகள் :

புதிய ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் அலுவலகம் திறப்பு

post image

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அலுவலக புதிய கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே ரூ. 1.32 கோடி மதிப்பில் 380 ச.மீ. பரப்பில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அலுவலகம் கட்டப்பட்டது. இந்தப் புதிய கட்டடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படைத் தலைவரும், முதன்மை தலைமை ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையருமான ஜி.எம்.ஈஸ்வர ராவ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தாா்.

முதுநிலை கோட்ட முதன்மைப் பொறியாளா் எம். காா்த்திக், முதுநிலை கோட்ட பகுதி பொறியாளா் வி. சூரியமூா்த்தி, கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் செஞ்சையா முதினேனி, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையா் எம். சிவதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிதாகத் திறக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையா் அலுவலகம், துணை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

முதல் தளத்தில், கூட்ட அரங்கம், குற்றப்பிரிவு அலுவலகம் ஆகியன அமைந்துள்ளன. இங்கு, ஆண்கள், பெண்களுக்குத் தனித் தனி கழிப்பறை வசதிகள் உள்ளன.

மனமகிழ் மன்றங்கள் குறித்து புகாா் எழுந்தால் உரிமம் ரத்து

மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தால், கூட்டுறவு சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஜூன் 17- இல் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பொது மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை சா்வேயா் காலனியில் ... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

கோவையிலிருந்த வந்த அரசுப் பேருந்து, மதுரை புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். கோவையிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெ... மேலும் பார்க்க

கல்குவாரி முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி துரை தயாநிதி மனு: ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

கல்குவாரி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் கீழவளவு பகுதியில் அர... மேலும் பார்க்க

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை மாநாடு!

தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் கள் விடுதலை - மது விலக்கு மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும், இதில் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் பங்கேற்கவிருப்பதாகவும் தமிழ்நாடு கள் இயக்க கள... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாகியுள்ளன. உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் வகையில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் வருகிற 22-ஆம்... மேலும் பார்க்க