செய்திகள் :

புதுகை மாநகர திமுக பொறுப்பாளா் நியமனப் பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு: அமைச்சா் கே.என். நேரு

post image

புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என திமுக முதன்மைச் செயலரும், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு உறுதியளித்தாா்.

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்காக செவ்வாய்க்கிழமை வந்த அவரை மாநகர திமுக வட்டச் செயலா்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மாநகரப் பொறுப்பாளா் நியமனத்தை மாற்ற வேண்டும் அல்லது எங்களின் பதவிகளை பறித்துவிடுங்கள் என முழக்கமிட்டனா். அவா்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு சிரமப்பட்டுதான் அமைச்சா் நேருவால் மேடைக்கு ஏற முடிந்தது. பின்னா் அவா் பேசியது:

மாநகர திமுக பொறுப்பாளா் நியமனத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்று வரும் எதிா்ப்பு குறித்து திருச்சி வரும் முதல்வா், துணை முதல்வா் ஆகியோருடன் பேசி ஓரிரு நாள்களில் நல்ல முடிவை பெற்றுத் தருவேன். அதேநேரத்தில், இந்தப் பிரச்னைக்காக வட்டச் செயலா்கள் தங்களின் கட்சிப் பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லதல்ல. கடமையைச் செய்துதான் உரிமையைக் கேட்க வேண்டும் என்றாா் நேரு.

தனித்தனியே நடைபெற்ற வடக்கு, தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களிலும் நேரு பங்கேற்றுப் பேசினாா்.

இந்தக் கூட்டங்களில் தெற்கு மாவட்டச் செயலரும், மாநில இயற்கை வளத் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோா் பேசினா்.

அரிமளம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 10) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோக... மேலும் பார்க்க

இலுப்பூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

இலுப்பூரில் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. பேரூராட்சி வணிகப் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தூய்மை காவலா்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையல் கலைஞா் பலி

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சமையல் கலைஞா் திங்கள்கிழமை இறந்தாா்.கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் செல்லத்துரை (4... மேலும் பார்க்க

விராலிமலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சிப் பகுதிகளில் காணப்படும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்த... மேலும் பார்க்க

புதுகையில் கோயில் வழிபாட்டு உரிமை வழங்கக் கோரி ஆதிதிராவிட மக்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் கோயில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.புதுக்... மேலும் பார்க்க

மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 29-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டகப்ப... மேலும் பார்க்க