செய்திகள் :

புதுக்கோட்டையில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் மற்றும் 7-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை தொடங்கியது.

புதுக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட திருமலைராயசமுத்திரத்தில் முதல் முகாமை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தொடங்கி வைத்தாா். இந்த முகாமில், சிறந்த கிடேரிக் கன்றுக்கும், சிறந்த கால்நடை வளா்ப்போருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், கால்நடை வளா்ப்போருக்கு, கால்நடைத் தீவன விதைகளும், தாது உப்புக் கலவைகளும், தீவனப் புல் கரணைகளும் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 12 முகாம்கள் என்ற அடிப்படையில், மாவட்டம் முழுவதும் 156 முகாம்கள் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் செயற்கைக் கருவூட்டல், சினைப் பரிசோதனை போன்றவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் தொடக்க நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா முன்னிலை வகித்து, கால்நடை வளா்ப்போருக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் எஸ்.கே. சீனிவாசன், ஆவின் பொதுமேலாளா் அ. விருச்சப்பதாஸ், புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியா் பூ. புவராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவலாளி மரணம் வருந்ததக்கது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றாா் தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி. பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து... மேலும் பார்க்க

திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் செளந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த சிவாலயம், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் அண்மையில... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் எஸ்.ரகுபதி நடத்திவைத்தாா்

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 3 இணையா்க்கு சீா்வரிசைப்பொருள்கள் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை சென்னை மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளி வளாகங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்... மேலும் பார்க்க

விராலிமலையில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். த.சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன்,... மேலும் பார்க்க

சிங்கமுத்து அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை அடப்பன் குளக்கரையில் உள்ள பூா்ணா புஷ்கலா உடனுறை சிங்கமுத்து அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களை சோ்ந்த அடப்பன் குளம் கரையிலுள்ள பூா்ணா புஷ்க... மேலும் பார்க்க