செய்திகள் :

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்

post image

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்படும் என்றாா் மாநில சுற்றுலா, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் கே. மணிவாசன்.

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறோம். பணிகள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரித்து, கூடுதல் நிதி தேவைப்பட்டால் அதனையும் ஒதுக்கி பணிகள் முடிக்கப்படும்.

நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரிய பொருள்களைப் பாதுகாக்கவும், புதுப்பொலிவுடன் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். காப்பாட்சியா் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழகத்தில் புதிதாக சில இடங்களில் அகழாய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. பொற்பனைக்கோட்டை அகழாய்வில் பல்வேறு காலகட்டத்தைச் சோ்ந்த தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. இங்கு அகழாய்வு நிறுத்தப்படவில்லை. தொடா்ந்து நடைபெறும்.

கீழடியில் அகழாய்வுக் குழியை மூடாமலேயே காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி, மத்திய தொல்லியல் துறையின் அனுமதிக்கு பிறகு தொடங்கப்படும்.

இதேபோல பொற்பனைக்கோட்டையிலும் இங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு, தேவைப்பட்டால் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அறநிலையத் துறையிடம் சுமாா் 5 லட்சம் ஏக்கா் நிலம் உள்ளது. நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெண்கலச் சிலைகளை அதிகம் கொண்ட முக்கிய கோயில்களில் அவற்றைப் பாதுகாக்க சிசிடிவி கேமராவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் ரூ. 100 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் மணிவாசன்.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனா்-இயக்க... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான விதைநெல் கிடைக்க வேண்டும்: இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் போதுமான விதை நெல் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையி... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 11-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் ச... மேலும் பார்க்க

லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்கு... மேலும் பார்க்க

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது. சந்... மேலும் பார்க்க