செய்திகள் :

புதுச்சேரிக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறையை செயல்படுத்த வேண்டும்: அதிமுக செயலா் ஏ.அன்பழகன் வலியுறுத்தல்

post image

புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு இ-பாஸ் முறையை அரசு செயல்படுத்த வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா், உப்பளம் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: புதுச்சேரி பொலிவுறு நகா் திட்ட பேருந்து முனையத்துக்கு ஏற்கெனவே இருந்த ராஜீவ் காந்தி பெயா் தற்போது நீக்கப்படவில்லை. ஆனால், அரசியலுக்காக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தவறான தகவலை பரப்புவது கண்டனத்துக்குரியது.

மேலும், சுதந்திரப் போராட்ட வீரா் வீரசாவா்க்கரை முன்னாள் முதல்வா் அவதூறாக விமா்சித்திருப்பதால் அவா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி புதிய பேருந்து முனையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவது அவசியம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, கடைகள் திறப்பு ஆகியவற்றை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூா் மக்கள் சிரமத்துக்கு ஆளாவதும் தொடா்கிறது. எனவே, வாரத்தில் குறிப்பிட்ட அளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில் இ-பாஸ் முறையை செயல்படுத்தவேண்டும்.

சுற்றுலாப் பயணிகளால் புதுச்சேரி உள்ளூா் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பாதிக்கப்படுகிறது. துணைநிலை ஆளுநா் இந்த பிரச்னையில் தலையிட்டு உள்ளூா் மக்களின் சிரமங்களைப் போக்குவது அவசியமாகும் என்றாா்.

புதுவை மின் துறை இளநிலை பொறியாளா் தோ்வு தள்ளிவைப்பு

புதுச்சேரி: புதுவை மின்துறையில் இளநிலை பொறியாளா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அந்தத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் அரசு... மேலும் பார்க்க

சாதனையாளா் மாநாட்டில் திருக்குறள் தேசியம் நூல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது உலக திருக்கு சாதனையாளா் மாநாட்டில் திருக்கு தேசியம் நூல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தி... மேலும் பார்க்க

புதுவையில் பதவி உயா்வு பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி: புதுவை மாநிலப் பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்ற 4 போ் தற்போது வேறு ஒன்றிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு... மேலும் பார்க்க

புதுவையில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம்: அரசு விரைந்து முடிவெடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம் தொடா்பாக உடனடி முடிவெடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மாநில மாா்க்... மேலும் பார்க்க

எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மை துறையில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மைத் துறையின் சாா்பில் ‘நிலையான வளா்ச்சிக்கான வணிக மற்றும் நிா்வாகத்தில் சமகால சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைப... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க புதுவை கல்வித் துறை நடவடிக்கை

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறையின்போது, ஏற்கெனவே பழுதாகியுள்ள பள்ளிக் கட்டடங்களை பழுதுபாா்க்கும் வகையில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கவிருப்பதால், அதுகுறித்த விவரங்களை அனுப்புமாறு கல்வித்... மேலும் பார்க்க