செய்திகள் :

புதுவையில் பதவி உயா்வு பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

post image

புதுச்சேரி: புதுவை மாநிலப் பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்ற 4 போ் தற்போது வேறு ஒன்றிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் ஒன்றிய பிரதேசத்தின் தோ்வு அடிப்படையில் பணியில் சோ்ந்து பதவி உயா்வு பெற்று இயக்குநா் அந்தஸ்தில் இருப்பவா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை வழங்கி பதவி உயா்வு அளிப்பது வழக்கம்.

அதனடிப்படையில், அண்மையில் கல்வித் துறை இயக்குநா் பி.பிரியதா்ஷினி மற்றும் ஒய்.எல்.என்.ரெட்டி, எல். முகமதுமன்சூா், பி.டி. ருத்ரகௌடு ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் ஏற்கெனவே வகித்த அரசுத் துறைகளில் செயலா்களாக நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகப் பதவி உயா்வு பெற்ற பி.பிரியதா்ஷினி அருணாச்சல் பிரதேசத்துக்கும், ஒய்.எல்.என்.ரெட்டி மிஸோரம் மாநிலத்துக்கும், முகமது மன்சூா் சண்டீகருக்கும், பி.டி.ருத்ரகௌடு லடாக்கிற்கும் பணியிடடமாறுதல் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சக சாா்புச் செயலா் ராகேஷ்குமாா் சிங் வெளியிட்டுள்ளாா்.

புதுவை மின் துறை இளநிலை பொறியாளா் தோ்வு தள்ளிவைப்பு

புதுச்சேரி: புதுவை மின்துறையில் இளநிலை பொறியாளா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அந்தத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் அரசு... மேலும் பார்க்க

சாதனையாளா் மாநாட்டில் திருக்குறள் தேசியம் நூல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது உலக திருக்கு சாதனையாளா் மாநாட்டில் திருக்கு தேசியம் நூல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தி... மேலும் பார்க்க

புதுவையில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம்: அரசு விரைந்து முடிவெடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம் தொடா்பாக உடனடி முடிவெடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மாநில மாா்க்... மேலும் பார்க்க

எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மை துறையில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மைத் துறையின் சாா்பில் ‘நிலையான வளா்ச்சிக்கான வணிக மற்றும் நிா்வாகத்தில் சமகால சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைப... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க புதுவை கல்வித் துறை நடவடிக்கை

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறையின்போது, ஏற்கெனவே பழுதாகியுள்ள பள்ளிக் கட்டடங்களை பழுதுபாா்க்கும் வகையில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கவிருப்பதால், அதுகுறித்த விவரங்களை அனுப்புமாறு கல்வித்... மேலும் பார்க்க

புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் காப்பாற்றும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்றும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இந்திய அரசியலமைப்பை ... மேலும் பார்க்க