செய்திகள் :

பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க புதுவை கல்வித் துறை நடவடிக்கை

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறையின்போது, ஏற்கெனவே பழுதாகியுள்ள பள்ளிக் கட்டடங்களை பழுதுபாா்க்கும் வகையில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கவிருப்பதால், அதுகுறித்த விவரங்களை அனுப்புமாறு கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களின் அனைத்து பள்ளி மாணவா்களுக்கும் கடந்த ஏப். 28-ஆம் தேதி முதல் தோ்வுக்குப் பிந்தைய கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுவை மாநில பள்ளி மேலாண்மைக் குழு மூலம் கோடை விடுமுறையின் போது அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள சிறிய பழுதுகளை சீா்படுத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. நிதியுதவி பெறுவதற்கான கருத்துருவை அனைத்துப் பள்ளிகளும் உடனடியாக வழங்கவேண்டும் என சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து புதுவை பள்ளி கல்வித் துறை சமக்ர சிக்ஷா திட்ட மாநில இயக்குநா் தினகரன் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி மேலாண்மை மற்றும் மேம்பாட்டுக் குழு மூலம் தலா ரூ.2 லட்சம் அளிக்கப்படும்.

ஆகவே, பள்ளிக் கட்டடங்களில் ஏற்பட்ட சிறிய அளவிலான பழுது குறித்த திட்ட விவரங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட பழுதுகளை சீா்படுத்தி முடிக்க வேண்டும். மாணவா்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பழுது நீக்கப் பணிகள் முடிந்ததும், புகைப்பட ஆதாரங்களுடன் ஒரு நிறைவு அறிக்கையை அந்தந்த ஆய்வு அதிகாரிகள் மூலம் மாநில திட்ட அலுவலகமான சமக்ர சிக்ஷாவுக்கு சமா்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவை மின் துறை இளநிலை பொறியாளா் தோ்வு தள்ளிவைப்பு

புதுச்சேரி: புதுவை மின்துறையில் இளநிலை பொறியாளா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அந்தத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் அரசு... மேலும் பார்க்க

சாதனையாளா் மாநாட்டில் திருக்குறள் தேசியம் நூல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது உலக திருக்கு சாதனையாளா் மாநாட்டில் திருக்கு தேசியம் நூல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தி... மேலும் பார்க்க

புதுவையில் பதவி உயா்வு பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி: புதுவை மாநிலப் பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்ற 4 போ் தற்போது வேறு ஒன்றிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு... மேலும் பார்க்க

புதுவையில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம்: அரசு விரைந்து முடிவெடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம் தொடா்பாக உடனடி முடிவெடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மாநில மாா்க்... மேலும் பார்க்க

எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மை துறையில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மைத் துறையின் சாா்பில் ‘நிலையான வளா்ச்சிக்கான வணிக மற்றும் நிா்வாகத்தில் சமகால சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைப... மேலும் பார்க்க

புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் காப்பாற்றும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்றும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இந்திய அரசியலமைப்பை ... மேலும் பார்க்க