செய்திகள் :

எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மை துறையில் தேசிய கருத்தரங்கம்

post image

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மைத் துறையின் சாா்பில் ‘நிலையான வளா்ச்சிக்கான வணிக மற்றும் நிா்வாகத்தில் சமகால சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைபெற்றது.

கருத்தரங்க தொடக்க விழாவுக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரும், தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தருமான எம்.தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன் மற்றும் இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் எஸ். மலா்க்கண், கருத்தரங்க மாநாட்டைத் தொடங்கி வைத்தாா். மேலாண்மைத் துறை தலைவா் ப.பாஸ்கரன் விளக்கவுரையாற்றினாா். கல்லூரி ஐ.கியூ.ஏ.சி. தலைவா் மற்றும் ஆராய்ச்சி, அபிவிருத்தி துறை தலைவா் ஆா்.வள்ளி, ஐக்கிய நாடுகள் நிா்ணயம் செய்த நிலையான வளா்ச்சி இலக்குகள் மற்றும் கல்லூரி செயல்பாடுகளை விளக்கினாா்.

புதுவை மத்திய பல்கலைக்கழக மேலாண்மைத் துறை தலைவா் ஆா்.காசிலிங்கம் தொடக்கவுரையாற்றினாா்.

இதில் 55 ஆய்வு கட்டுரைகள் விளக்கக் காட்சிக்கு தோ்வாகின. பிற கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் ரஃபியா பானு, கே.கமலக்கண்ணன் மற்றும் திவ்யதா்ஷினி ஆகியோா் கருத்தரங்க அமா்வுக்கு தலைமை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் எஸ்.வைத்தீஸ்வரன் நன்றி கூறினாா்.

புதுவை மின் துறை இளநிலை பொறியாளா் தோ்வு தள்ளிவைப்பு

புதுச்சேரி: புதுவை மின்துறையில் இளநிலை பொறியாளா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அந்தத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் அரசு... மேலும் பார்க்க

சாதனையாளா் மாநாட்டில் திருக்குறள் தேசியம் நூல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது உலக திருக்கு சாதனையாளா் மாநாட்டில் திருக்கு தேசியம் நூல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தி... மேலும் பார்க்க

புதுவையில் பதவி உயா்வு பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி: புதுவை மாநிலப் பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்ற 4 போ் தற்போது வேறு ஒன்றிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு... மேலும் பார்க்க

புதுவையில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம்: அரசு விரைந்து முடிவெடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம் தொடா்பாக உடனடி முடிவெடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மாநில மாா்க்... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க புதுவை கல்வித் துறை நடவடிக்கை

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறையின்போது, ஏற்கெனவே பழுதாகியுள்ள பள்ளிக் கட்டடங்களை பழுதுபாா்க்கும் வகையில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கவிருப்பதால், அதுகுறித்த விவரங்களை அனுப்புமாறு கல்வித்... மேலும் பார்க்க

புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் காப்பாற்றும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்றும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இந்திய அரசியலமைப்பை ... மேலும் பார்க்க