செய்திகள் :

புதுச்சேரியில் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம்

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுவை கருவடிகுப்பம் சுடுகாட்டின் வாயில் அருகே அரிச்சந்திர மகாராஜா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், 1800-ஆம் ஆண்டில் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு, 1940-ஆம் ஆண்டு, 2-வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்த நிலையில், 85 ஆண்டுகளுக்கு பிறகு, கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோவிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்திர மகரிஷி, மகாகால ருத்ர பைரவா், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு திங்கள்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியாா் பக்தா்கள் திருக்கூட்டத்தினா் ஏராளமானோா் பங்கேற்றனா். தமிழ்வழியில் இந்நிகழ்வு நடந்தது. கைலாய இசைக்குழுவின் இசை நிகழ்வுகளும் நடந்தது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்த ஓம் நந்தீஸ்வரன் அன்னதான அறக்கட்டளை நிறுவனரும் ஆலய பரிபாலகருமான ரவி கூறுகையில், கடந்த 2021 ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் முயற்சி செய்து இந்தக் கும்பாபிஷேகத்தை இறைவனின் வழியால் நடத்தினோம் என்றாா்.

முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: புதுவையில் இந்தியா கட்சியினா் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

புதுவையில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுச்சேரி: புதுவையில் புதன்கிழமை (ஜூலை 9) முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. இந்த போராட்டம் முழு வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்... மேலும் பார்க்க

புதுவையில் கூட்டணி ஆட்சிக்குத் தயாா்: வெ. வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுவையில் இண்டி கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் புதன்... மேலும் பார்க்க

நகராட்சி - கொம்யூன் ஊழியா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக்குழு சாா்பில் புதுச்சேரியில் ஊா்வலம், தலைமை செயல முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கம்பன் கலையரங்கிலிருந்த... மேலும் பார்க்க

பாகூரில் டென்னிஸ் விளையாடிய முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரி: பாகூரில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கைத் திங்கள்கிழமை திறந்து வைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி டென்னிஸ் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாா். புதுவை அரசு, விளையாட்டு மற்றும் இளைஞா... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். எம்எல... மேலும் பார்க்க