இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
புதுச்சேரியில் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம்
புதுச்சேரி: புதுச்சேரியில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுவை கருவடிகுப்பம் சுடுகாட்டின் வாயில் அருகே அரிச்சந்திர மகாராஜா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், 1800-ஆம் ஆண்டில் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு, 1940-ஆம் ஆண்டு, 2-வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்த நிலையில், 85 ஆண்டுகளுக்கு பிறகு, கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்திர மகரிஷி, மகாகால ருத்ர பைரவா், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு திங்கள்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியாா் பக்தா்கள் திருக்கூட்டத்தினா் ஏராளமானோா் பங்கேற்றனா். தமிழ்வழியில் இந்நிகழ்வு நடந்தது. கைலாய இசைக்குழுவின் இசை நிகழ்வுகளும் நடந்தது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்த ஓம் நந்தீஸ்வரன் அன்னதான அறக்கட்டளை நிறுவனரும் ஆலய பரிபாலகருமான ரவி கூறுகையில், கடந்த 2021 ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் முயற்சி செய்து இந்தக் கும்பாபிஷேகத்தை இறைவனின் வழியால் நடத்தினோம் என்றாா்.