செய்திகள் :

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி தற்கொலை

post image

புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிக அளவு ரத்த அழுத்த மாத்திரைகளை விழுங்கி இன்று (ஜூலை 13) தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

நிறத்தை பொருட்படுத்தாமல் தனது திறமையின் காரணமாக மாடலிங் துறையில் அசத்திவந்த சங்கர பிரியா என்னும் சான் ரேச்சல் புதுச்சேரியிலுள்ள காராமணி குப்பத்தில் வசித்துவந்துள்ளார்.

கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னை காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இதனிடையே, இன்று தனது வீட்டில் அதிக எண்ணிக்கையிலான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பேஷன் நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தியதில் ஏற்பட்ட இழப்பு காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உலக அழகி

2020-2021 ஆண்டுகளில் மிஸ் பாண்டிச்சேரி, 2019-ல் மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு, அதே ஆண்டில் மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் என பல பட்டங்களை வென்றுள்ள ரேச்சல், கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.

இதையும் படிக்க | ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

Miss World San Rachel from Puducherry commits suicide

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் க... மேலும் பார்க்க

இன்று குடமுழுக்கு: விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.25 முதல் காலை 6.10 மணிக்குள் நடைபெறுவதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

ஆட்சியை விட்டு விலகும் முன் சட்டம் - ஒழுங்கை சரிசெய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கோரிக்கை

ஆட்சியை விட்டு விலகுவதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கை சரிசெய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் க... மேலும் பார்க்க

கட்டண விவரங்களை மறைத்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: என்எம்சி எச்சரிக்கை

கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ர... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றுமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பி... மேலும் பார்க்க

ரயில் தீ விபத்தில் புகையால் பாதித்தவா்களுக்கு சிகிச்சை! டிடிவி. தினகரன்

திருவள்ளூா் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எழுந்த கரும்புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் வலியுறுத்தி... மேலும் பார்க்க