செய்திகள் :

``புதுச்சேரி போலீஸ் லஞ்சம் வாங்கறாங்க… நாங்க நேர்மையா இருக்கோம்'' - ஐஆர்பிஎன் அறிக்கையால் சர்ச்சை

post image

புதுச்சேரியில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவு கடந்த 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைமையகம் கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஐ.ஆர்.பி.என் படைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட காலம் ஆவதால் அதை உள்ளூர் போலீஸுடன் இணைத்து, அவர்களுக்கு கொடுப்பதைப் போலவே பதவி உயர்வு, சம்பளம் ஆகியவை வழங்க வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டி.ஜி.பி ஷாலினி சிங் பிறப்பித்த உத்தரவில், மார்ச் 5-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை ரூட் மார்ச் (நடைபயணம்) செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஐ.ஆர்.பி.என் அதிகாரிகள் தரப்பிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கை பகிரப்பட்டு வருகிறது.

புதுச்சேரி போலீஸ்

(இது குறித்து பிப்ரவரி 28-ம் தேதியன்று புதுச்சேரி IRBn: `32 கி.மீ ரூட் மார்ச்’ - ஐ.ஆர்.பி.என் அதிகாரிகளுக்கு கொடுத்தது தண்டனையா... பயிற்சியா? என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம்.)

அந்த அறிக்கையில் புதுச்சேரி போலீஸார் மீது நேரடியாக வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, `லஞ்சம் வாங்கும் புதுச்சேரி போலீஸார் பலர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் கடமையை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறோம். எனவே எங்களுக்கான உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்’ என்ற கருத்துக்கு போலீஸார் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் புதுச்சேரி போலீஸாருக்கும், ஐ.ஆர்.பி.என் பிரிவினருக்கும் மறைமுக பனிப்போர் துவங்கியிருக்கிறது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சர்ச்சை பேச்சால் ஆட்சியர் பணியிட மாற்றம்.. என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ... மேலும் பார்க்க

Seeman-க்கு ஷாக் தரும் சம்பவங்கள்! DMK-க்கு அதிர்ச்சி தரும் ஆடியோ?! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,சீமானுக்கு, காவல்துறை அனுப்பிய சம்மன், அதை கிழித்த சீமான் பாதுகாவலர் என பரபரக்கும் அரசியல். 'என்னை பார்த்து திமுகவுக்கு பயம்' என்கிறார் சீமான். உண்மையில் பயப்படுவது சீமான் தா... மேலும் பார்க்க

``விருந்து சாப்பிடும் மத்திய குழுவினர் மொய் வைப்பதில்லை..'' - குறைதீர் கூட்டத்தில் சாடிய விவசாயி!

தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்... மேலும் பார்க்க

கரூர்: ``இந்த ஒரு ஏரி நிரம்பினால் 50 கிராமங்கள் சிறக்கும்..'' - தீர்வு சொல்லும் மாணவிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கணித அறிவியல் மன்றம் சென்னை மற்றும் அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு நியூ டெல்லி ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2024 - ம் ஆண்டிற்கான மாநில அளவிலான அறிவ... மேலும் பார்க்க

``ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயம்..'' - கர்நாடக அரசு எச்சரிக்க காரணம் என்ன?

ஹோட்டலில் தயாரிக்கப்படும் இட்லி சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கர்நாடகா அரசு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பெரும்பாலானோர் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவாக இட்லி உள்ளது.... மேலும் பார்க்க

அப்போ `ஜோ பைடன்', இப்போ `ட்ரம்ப்' - ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?!|Explained

2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரின் வயது இந்த மாதத்தோடு மூன்று.இந்தப் போருக்கு பின் தொடங்கிய போர் எல்லாம் சமாதனத்தையும், போர் நிறுத்தத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கு... மேலும் பார்க்க