செய்திகள் :

``ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயம்..'' - கர்நாடக அரசு எச்சரிக்க காரணம் என்ன?

post image

ஹோட்டலில் தயாரிக்கப்படும் இட்லி சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கர்நாடகா அரசு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பெரும்பாலானோர் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவாக இட்லி உள்ளது. சாலையோர கடைகளில், உணவகங்களில் இட்லியை பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு தயாரிப்பதாக கூறப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து அதன் மாதிரியே சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிய நிலையில் முதற்கட்ட ஆய்வின் முடிவில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவகங்களில் இட்லியை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் பெரும்பாலான இட்லி கடைகளில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இட்லியை சூடுபடுத்தும்போது பிளாஸ்டிக் ஷீட்டில் இருந்து 'carcinogenic' என்ற ரசாயனம் வெளியேறி புற்றுநோய்க்கு வழிவகுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் பேப்பரில் இட்லி

இது குறித்து கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தனது எக்ஸ் பக்கத்தில், "உணவங்கள் மற்றும் ஹோட்டல்களில் இட்லி சமைக்க பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதை தடைசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிடப்படும். முன்பு, இட்லி தயாரிக்க பருத்தி துணி பயன்படுத்தப்பட்டது. இப்போது பெரும்பாலான ஹோட்டல்கள் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக, பொதுமக்கள் உட்கொள்ளும் இட்லிகளில் புற்றுநோய் உண்டாக்கும் மூலப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்று தெரிவித்தார்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சர்ச்சை பேச்சால் ஆட்சியர் பணியிட மாற்றம்.. என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ... மேலும் பார்க்க

Seeman-க்கு ஷாக் தரும் சம்பவங்கள்! DMK-க்கு அதிர்ச்சி தரும் ஆடியோ?! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,சீமானுக்கு, காவல்துறை அனுப்பிய சம்மன், அதை கிழித்த சீமான் பாதுகாவலர் என பரபரக்கும் அரசியல். 'என்னை பார்த்து திமுகவுக்கு பயம்' என்கிறார் சீமான். உண்மையில் பயப்படுவது சீமான் தா... மேலும் பார்க்க

``விருந்து சாப்பிடும் மத்திய குழுவினர் மொய் வைப்பதில்லை..'' - குறைதீர் கூட்டத்தில் சாடிய விவசாயி!

தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்... மேலும் பார்க்க

கரூர்: ``இந்த ஒரு ஏரி நிரம்பினால் 50 கிராமங்கள் சிறக்கும்..'' - தீர்வு சொல்லும் மாணவிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கணித அறிவியல் மன்றம் சென்னை மற்றும் அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு நியூ டெல்லி ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2024 - ம் ஆண்டிற்கான மாநில அளவிலான அறிவ... மேலும் பார்க்க

அப்போ `ஜோ பைடன்', இப்போ `ட்ரம்ப்' - ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?!|Explained

2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரின் வயது இந்த மாதத்தோடு மூன்று.இந்தப் போருக்கு பின் தொடங்கிய போர் எல்லாம் சமாதனத்தையும், போர் நிறுத்தத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கு... மேலும் பார்க்க

``புதுச்சேரி போலீஸ் லஞ்சம் வாங்கறாங்க… நாங்க நேர்மையா இருக்கோம்'' - ஐஆர்பிஎன் அறிக்கையால் சர்ச்சை

புதுச்சேரியில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவு கடந்த 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைமையகம் கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஐ.ஆர்.பி.என் படைப் பிரிவு ஆரம்பிக்கப... மேலும் பார்க்க