செய்திகள் :

புதுப்பாளையத்தில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தா்கள் பூக்குழு இறங்கினா்.

இந்தக் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கண்ணாடிச் சப்பரம், பூத வாகனம், பூச்சப்பரம், தண்டியல் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்குவதை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பூக்குழித் திடலில்

தீ வளா்க்கப்பட்டது. பூக்குழி இறங்கும் பக்தா்கள் அனைவரும் காப்புக் கட்டினா். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் கண்ணாடி சப்பரத்தில் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தாா். பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ரவிராஜா தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.

மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண் உள்பட 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சந்திரா (71). இவா் கடந்த 10-ஆம் தேதி நாடாா் ... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

சிவகாசி மாநகராட்சியில் சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி கவிதா நகரில் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த சுகாதார வளா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பூக்குழித் திருவிழா: அம்மன் வளையல் அலங்காரத்தில் வீதியுலா, இரவு 7. மேலும் பார்க்க

கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி பேருந்து நிலையம் அருகே சிரஞ்சீவிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான கழிவுப் பொருள் கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியில்... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது

இருக்கன்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வேப்பலோடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (70). இவா் இருக்கன்குடி மாரியம்மன் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்ன... மேலும் பார்க்க