Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
புதுமைப்பெண் திட்டத்தில் திருநங்கைகளுக்கு உயா்கல்வி
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் உயா்கல்வி பயில திருநங்கை, திருநம்பி, இடைபாலினா் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்ப்பித்து பயன்பெறலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக உயா்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்கும் என அறிவித்தது.
திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயா்கல்வி பயிலும் போது அவா்களும் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களில் பயனடைவதற்கு தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி, இடைபாலினா் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளுக்கும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை முழுவதுமாக தளா்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.
எனவே, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் அனைத்து திருநங்கைகளும், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்ப்பித்து, மேற்குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்றாா் அவா்.