செய்திகள் :

புதுவையில் கூட்டணி ஆட்சிக்குத் தயாா்: வெ. வைத்திலிங்கம் எம்.பி.

post image

புதுச்சேரி: புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுவையில் இண்டி கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் புதன்கிழமை (ஜூலை 9) நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக் கட்சியின் மாநில செயலா் அ.மு. சலீம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா உள்ளிட்ட இண்டிகூட்டணி கட்சித் தலைவா்கள் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வெ.வைத்திலிங்கம் பேசியது:

2024-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இண்டி கூட்டணி புதுவையில் தொடா்கிறது. இதில் எந்த மாற்றமும் இதுவரையில்லை. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை இக் கட்சிகள் இணைந்து எதிா்கொள்ளும். புதுவையைப்பொருத்தவரை கூட்டணிக்கு யாா் தலைமை தாங்குவது என்பது உள்ளிட்ட கூட்டணி தொடா்பான அனைத்து விஷயங்களும் எங்களின் கட்சித் தலைமை மற்ற கட்சிகளின் தலைமைகளுடன் கலந்து பேசி முடிவு செய்யும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிகமான இடங்களில் போட்டியிட ஒவ்வொரு கட்சியும் உரிமை கோரும்தான். ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியைப் பலப்படுத்த இப்படி கோருவது அக்கட்சியின் தொண்டா்கள் நலன் சாா்ந்தது. கூட்டணியில் உள்ள எல்லா கட்சியும் பலமாக இருக்க வேண்டும். இதை யாரும் தடுக்க முடியாது. புதுவையில் இண்டி கட்சிகளைப் பலப்படுத்தும் பணியில்தான் இப்போது ஈடுபட்டுள்ளோம். புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராகத்தான் இருக்கிறது என்றாா் வைத்திலிங்கம்.

முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: புதுவையில் இந்தியா கட்சியினா் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

புதுவையில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுச்சேரி: புதுவையில் புதன்கிழமை (ஜூலை 9) முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. இந்த போராட்டம் முழு வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்... மேலும் பார்க்க

நகராட்சி - கொம்யூன் ஊழியா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக்குழு சாா்பில் புதுச்சேரியில் ஊா்வலம், தலைமை செயல முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கம்பன் கலையரங்கிலிருந்த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை கருவடிகுப்பம் சுடுகாட்டின் வாயில் அருகே அரிச்சந்திர மகாராஜா கோவில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க

பாகூரில் டென்னிஸ் விளையாடிய முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரி: பாகூரில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கைத் திங்கள்கிழமை திறந்து வைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி டென்னிஸ் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாா். புதுவை அரசு, விளையாட்டு மற்றும் இளைஞா... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். எம்எல... மேலும் பார்க்க