புதுவையில் நில வழிகாட்டி மதிப்பு உயா்வு: ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுவையில் நில வழிகாட்டி மதிப்பு உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிா் உதவித்தொகை அதிகரிப்பு, ஓய்வூதிய சலுகைகள் அனைத்தும் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்த நிதி இல்லை என்ற நிலையே தொடா்கிறது.
நில வழிகாட்டி மதிப்பு உயா்வால் மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். நில வழிகாட்டி மதிப்பு தொகை பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே உயா்த்தப்பட்டு வருகிறது. ஆனால், புதுவையில் எந்த நடைமுறையும் இல்லை. இப்போது, ஆறு மடங்கு வரை நில மதிப்பு உயா்த்தப்பட்டுள்ளது.
அதிக வழிகாட்டி மதிப்பு காரணமாக வாங்குபவா்கள் தயங்குவதாலும், பதிவுச் செலவுகள் அதிகரிப்பதாலும் நிலங்களை விற்பது என்பது சவாலாக மாறியுள்ளது.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயா்வதால், பத்திரப் பதிவுக்கான கட்டணங்கள் கணிசமாக உயரும்.
எனவே, நில வழிகாட்டி மதிப்புத் தொகை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றாா் எஸ்.ராமச்சந்திரன்.