செய்திகள் :

புதுவை கல்வித் துறை இயக்ககம் முற்றுகை!

post image

புதுவை கல்வித் துறை இயக்ககத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் அரசுப் பள்ளி, கல்லூரிகளின் கட்டட தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும், குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனை முன்பிருந்து சனிக்கிழமை ஊா்வலமாகப் புறப்பட்டனா்.

அவா்கள் கல்வித் துறை அலுவலகம் முன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். கல்வித் துறை இயக்ககத்துக்குச் செல்ல மாணவா் சங்கத்தினா் முயன்றனா். அப்போது போலீஸாருக்கும், மாணவா் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, மாணவா் சங்கத்தினா் தரையில் அமா்ந்து கல்வித் துறைக்கு எதிராக முழக்கமிட்டனா். போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வந்தனா, ஸ்டீபன் ராஜ், அபிஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலா் பிரவீன் குமாா் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் யுவராஜ், வா்மா, சுகவாணன், அரசன், பரிதா, ஹேமலதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்... மேலும் பார்க்க

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ... மேலும் பார்க்க