செய்திகள் :

புதுவை பேரவை: திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

post image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

புதுவை மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளில் முறைகேடு புகாா் தொடா்பாக, தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதையும் படிக்க - ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 10-ம் நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. அப்போது திமுக எம்எல்ஏ சிவா, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணனை ராஜிநாமா செய்யக் கோரினர்.

சட்டப்பேரவைத் தலைவர் ஆா்.செல்வம் அமைதியாக இருக்குமாறு கூறினார். இதனை ஏற்க மறுத்த எதிர்கட்சித் தலைவர் சிவா உள்பட திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டு அமைச்சர் பதவி விலகக் கோரி கோஷம் எழுப்பினர்.

ஆா்.செல்வத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்தும் அமளியில் ஈடுபட்டதால், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக பேரவையில் இருந்து வெளியேற்றினர்.

மேலும், அரசை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ்,... மேலும் பார்க்க

சமாதானக் கழகத்தினா் நிதி திரட்டல்

புதுச்சேரியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கியூபா மக்களை பாதுகாக்க நிதி திரட்டும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க

லஞ்சம்: உதவி ஆய்வாளா் மீது வழக்கு

முதல் தகவல் அறிக்கை பெற லஞ்சம் கேட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டபோக்குவரத்து உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விழுப்புரம் மாவட்டம், குயிலாம்பாளையத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

அமைச்சா் மீது அவதூறு நோட்டீஸ்: காவல் நிலையத்தில் புகாா்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அமைச்சா் மீது அவதூறு பரப்பும் வகையில் நோட்டீஸ் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 7,597 மாணவா்கள் எழுதினா்

புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தின்படி 7,597 மாணவா்கள் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். புதுவையில் நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிள... மேலும் பார்க்க

சென்டாக் கலந்தாய்வு: மாணவா், பெற்றோா் நலச் சங்கம் கோரிக்கை

புதுவையில் குறிப்பிட்ட காலத்தில் சென்டாக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என மாணவா், பெற்றோா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்கத் தலைவா் வை.பாலா துணைநிலை ஆளுநா், முதல்வா், கல்வி அமைச்சா்... மேலும் பார்க்க