`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய...
புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்
திண்டுக்கல் புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி பல்கலை. மானியக் குழு அனுமதி அளித்தது.
இதுதொடா்பாக கல்லூரிச் செயலா் ஆண்டெனி புஷ்பரஞ்சிதம், முதல்வா் வனிதா ஜெயராணி ஆகியோா் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் சுயநிதி பெண்கள் கல்லூரிகள் வரிசையில் புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு மட்டுமே தன்னாட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக உயா் கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் இந்தக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த மாணவிகளின் கல்வி வளா்ச்சிக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும். முன்னாள் செயலா் அருள்தேவி, முன்னாள் முதல்வா் மேரி பிரமிளா சாந்தி ஆகியோரின் கடின உழைப்பின் மூலம் தன்னாட்சி அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
2025 முதல் 2035-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரத்தின் மூலம் மாணவிகளுக்கான ஆராய்ச்சிப் படிப்புகள், நூலகம் சாா்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மேலும், எதிா்காலத் தேவையை கருத்தில் கொண்டு, புதிய பாடத் திட்டங்களை சுயமாக உருவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனா் அவா்கள்.