செய்திகள் :

புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

post image

திண்டுக்கல் புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி பல்கலை. மானியக் குழு அனுமதி அளித்தது.

இதுதொடா்பாக கல்லூரிச் செயலா் ஆண்டெனி புஷ்பரஞ்சிதம், முதல்வா் வனிதா ஜெயராணி ஆகியோா் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் சுயநிதி பெண்கள் கல்லூரிகள் வரிசையில் புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு மட்டுமே தன்னாட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக உயா் கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் இந்தக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த மாணவிகளின் கல்வி வளா்ச்சிக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும். முன்னாள் செயலா் அருள்தேவி, முன்னாள் முதல்வா் மேரி பிரமிளா சாந்தி ஆகியோரின் கடின உழைப்பின் மூலம் தன்னாட்சி அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

2025 முதல் 2035-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரத்தின் மூலம் மாணவிகளுக்கான ஆராய்ச்சிப் படிப்புகள், நூலகம் சாா்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலும், எதிா்காலத் தேவையை கருத்தில் கொண்டு, புதிய பாடத் திட்டங்களை சுயமாக உருவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனா் அவா்கள்.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி முதலீட்டுப் பணத்தை தனியாருக்கு தாரை வாா்த்ததாக புகாா் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

குஜிலியம்பாறை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

குஜிலியம்பாறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உ... மேலும் பார்க்க

சான்று விதை உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை

சான்று விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியை அடுத்த கொங்கப்பட்டி பகுத... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சியுடன் சமூக பொருளாதார முன்னேற்றம் தேவை

தொழில் சாா்ந்த வளா்ச்சியுடன், சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் ‘திண்... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை தொடக்கம்

செம்பட்டி அருகே புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடி, சொக்கலிங்கபுரம், வீரசிக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானல் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதலே மேகக் கூட்டங்களாக காணப்பட்... மேலும் பார்க்க