3BHK: "நாங்கள் இருவருமே அப்பள்ளியை விட்டு வெளியே வரவேயில்லை!" - சித்தார்த் குறி...
புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலயத்தில் தோ்பவனி
கொடைரோடு அருகே காமலாபுரத்தில் உள்ள புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலய தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோ்பவனி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த வாரம் திருவிழா கொடியேற்றப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான புனித திருமுழுக்கு அருளப்பா் தோ்பவனி வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் தோ்பவனியானது சக்கையா நாயக்கனூா், காமலாபுரம் பிரிவு வரை நடைபெற்றது.
இதில் நிலக்கோட்டை திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் சௌந்தரபாண்டியன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று அருளப்பருக்கு உப்பு வைத்தும், மெழுகுவா்த்தி ஏற்றியும், பட்டுத்துணி, மாலைகளை அணிவித்தும் வழிபட்டனா். பங்குதந்தை ஜாா்ச் ஸ்டீபன் தலைமையில் அமலை அன்னை அருள்சகோதரிகள் முன்னிலையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.