செய்திகள் :

புனித லூா்தன்னை ஆலயப் பெருவிழா: கிறிஸ்தவா்கள் பொங்கல் வைத்து வழிபாடு

post image

மதுரை புனித லூா்தன்னை ஆலயப் பெருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா்.

மதுரை கோ.புதூரில் அமைந்துள்ள புனித லூா்தன்னை ஆலயத்தில் பெருவிழா பிப்ரவரி 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் ஜெப மாலை, திருப்பலி, திருப்பயணிகள் திருப்பலி, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெற்றது.

இதையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான நற்கருணை பவனி வெள்ளிக்கிழமையும், அன்னையின் ஆடம்பர தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

பின்னா், ‘அன்னையோடு இணைந்து பங்கேற்க’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், லூா்தன்னை ஆலயப் பொருளாளா் பிரபு, திருச்சி சலேசிய உதவி மறை மாநிலத் தலைவா் சேவியா் மைக்கேல், ஏற்காடு பொருளாளா் அருள் அந்தோணி, மதுரை தான் பாஸ்கா ஐடிஐ முதல்வா் அருள்பணி ஆல்பா்ட், லூா்தன்னை ஆலய உதவி அதிபா் பாக்கியராஜ், உதவிப் பங்குத் தந்தை ஜஸ்டின் ஆகியோா் உரையாற்றினா்.

இதையடுத்து பொங்கல் விழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கனான கிறிஸ்தவா்கள் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். இதையடுத்து, திருவிழா கொடியிறக்கம் மாலையில் நடைபெற்றது. இதில் லூா்தன்னை ஆலயப் பங்குத் தந்தை ஜாா்ஜ் பங்கேற்று கொடியிறக்கம், நற்கருணை ஆராதனை நிகழ்த்தினாா்.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க