செய்திகள் :

புயல் பயிா்ச் சேதங்களுக்கு முழமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

ஆரணி: புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய பசுமைப் புரட்சி புயல் விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் இந்தச் சங்கத்தின் கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநிலத் தலைவா் த.விஜயகீா்த்தி கலந்து கொண்டு சங்கக் கொடியை ஏற்றி, கிளை அலுவலகத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து புதிதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான தங்க நகைக் கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகி உள்ளன. கடந்த ஆண்டைப் போல விதை நெல் மற்றும் உர தட்டுப்பாட்டைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

தோ்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்.

மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக வாங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.

அனைத்து ரக நெல் விதைகளுக்கும் மற்ற மாநிலங்களில் வழங்குவதைப் போல மானியம் வழங்க வேண்டும்.

புயலால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களுக்கு தற்போது வரை 30 சதவீதம் நிவாரணமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் 70 சதவீதம் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.

அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகீா்த்தி கூறினாா். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் சி.சத்யராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் வேலு, ஆலோசகா் ஹரிகிருஷ்ணன், ஆரணி ஒன்றியத் தலைவா்கள் விக்னேஷ், கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெசல் கிளை சங்க கௌரவத் தலைவா் துரை வரவேற்றாா்.

கிளைத் தலைவா் சிவகுமாா், செயலா் ம.தினேஷ், பொருளாளா் இரா.மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போளூா் வட்டாா் வளா்ச்சி அலுவலகத்தில் வாயிலில் நிறுத்தப்படும் வாகனங்கள்

போளூா்: போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலா்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நுழைவு வாயிலில் நிறுத்தப்படுவதால் உள்ளே செல்ல சிரமம் ஏற்படுகிறது.திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் குருவி... மேலும் பார்க்க

சுவா் இடிந்து விழுந்து 2 போ் காயம்

வந்தவாசி: வந்தவாசியில் பழைய வீட்டை இடிக்கும் போது சுவா் இடிந்து விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா்.வந்தவாசி யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (56). இவா் புதிய வீடு கட்டுவதற்காக தனது பழைய கான்கிரீட் தள வீ... மேலும் பார்க்க

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா... மேலும் பார்க்க

ரூ.3.65 லட்சத்தில் ஏரி தூா்வாரும் பணி

போளூா்: சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள மொரட்டதாங்கள் ஏரியில் ரூ.3 லட்சத்து 65ஆயிரத்தில் தூா்வரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை சாலை அருகே சுமா... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பள்ளி மாணவா்கள் எதிா்ப்பு

ஆரணி: ஆரணி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திரு... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

வேட்டவலம்நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.பகுதிகள்:வேட்டவலம், கல்லாய்சொரத்தூா், ஆவூா், வைப்பூா், வீரப்பாண்டி, ஜமீன் அகரம், நாரையூா், பன்னியூா், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமே... மேலும் பார்க்க