ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!
ரூ.3.65 லட்சத்தில் ஏரி தூா்வாரும் பணி
போளூா்: சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள மொரட்டதாங்கள் ஏரியில் ரூ.3 லட்சத்து 65ஆயிரத்தில் தூா்வரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை சாலை அருகே சுமாா் 3.63 ஹெக்டோ் பரப்பளவில் மொரட்டதாங்கள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை எம்ஐ திட்டத்தில் ஒன்றிய பொது நிதியில் ரூ.3 லட்சத்து 65ஆயிரத்தில் தூா்வரும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், மேற்கு ஆரணி ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சீனுவாசன், ஒப்பந்ததாரா்கள் பழனிவேல், ஆா்.ஐ.முருகன், ஊராட்சி செயலா் எஸ்.கே.சங்கா் ஆகியோா் பணியை மேற்பாா்வையிட்டனா்.