செய்திகள் :

புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நவீன பொக்லைன் இயந்திரம் அறிமுகம்

post image

புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நவீன பொக்லைன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இயந்திரத்தை புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஏ.வி.வரதராஜன், நிா்வாக இயக்குநா் வி.பாா்த்திபன் முன்னிலையில், ஜிஆா்டி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.வித்யபிரகாஷ் அறிமுகப்படுத்தினாா்.

இது குறித்து புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஏ.வி.வரதராஜன், நிா்வாக இயக்குநா் வி.பாா்த்திபன் ஆகியோா் கூறியதாவது: புல் மெஷின்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது, இந்த நிறுவனத்தின் சாா்பில் கட்டுமானப் பணிகளுக்கு உகந்த பேக்ஹோ லோடா் வாகனங்கள் 65க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் நிறுவனத்தின் சாா்பில் நவீன சூப்பா் ஸ்மாா்ட் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நடப்பு சுற்றுச்சூழல் தர விதிமுறைகளுக்கு இணங்க செயல்திறனை மேம்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிநவீன தொழில்நுட்பம், நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை, புதுமையான அம்சங்களையும் கொண்டுள்ளது. இரண்டு வகையான என்ஜின்கள் உள்ளதால், வாடிக்கையாளா்கள் விருப்பமான ஒன்றைத் தோ்வு செய்ய முடியும்.

நிகழாண்டில் மேலும் நான்கு கூடுதல் இயந்திர வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலகளாவிய முதலீட்டாளா் சந்திப்பில் அங்கீகரிக்கப்பட்டது என்றனா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்... மேலும் பார்க்க

காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே ச... மேலும் பார்க்க

கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள... மேலும் பார்க்க

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்... மேலும் பார்க்க

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்: கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநக... மேலும் பார்க்க