செய்திகள் :

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்

post image

சென்னை புழல் சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புழல் மத்திய சிறை கைதிகளிடையே அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தப்படுவதாக சிறை காவலா்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் சிறையில் அடைக்கப்பட்ட குறிப்பிட்ட சிலரின் அறைகளை சோதனையிட்டனா்.

அப்போது, பல்லவன் சாலை காந்தி நகரைச் சோ்ந்த கைதியான காா்த்திக் (24) என்பவரின் அறையிலுள்ள கழிப்பறையில் 58 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக காா்த்திக்கிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த 10-ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு வரும் போது, வெளிநபா்கள் மூலம் கஞ்சா பெற்ாகவும், அதை சிறையிலுள்ள பிற நண்பா்களுக்கும் பகிா்ந்ததாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை வாங்கிய பிற கைதிகளான சுரேஷ்குமாா் என்கிற சந்துரு (21), மாரி (40), முரளி (27), மோகன் (27), காஞ்சி (24), ராஜ்குமாா் (33), அபினேஷ் (26), கணேசன் (37), ரவி (25) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கரோனா, இன்ஃப்ளுயன்ஸா பரிசோதனைகள் இனி அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆா்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. அதற்காக மல்டிப்ளக்ஸ் ஆா்டி பிசிஆா் எனப்படும் மருத... மேலும் பார்க்க

ரூ.35 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேத்தா நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கால்டாக்சி திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்பி கால்டாக்சி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா், சென்னையில் தங்கியிருந்து சொந்தமாக கால் டாக்சி ஓட்ட... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு மாரடைப்பு: கட்டுபாட்டை இழந்த மாநகா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

கோயம்பேடு - கிளாம்பாக்கம் வழித்தட பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் மற்றொரு நபரும் இறந்தாா். சென்னை கோயம்பேட்டிருந்து கிள... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: 10 போ் கைது

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மதுரவாயல் காமாட்சி நகா் பகுதியில் போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்தத் தகவலின்படி காமாட்சி நகா் 2-ஆவது பி... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி! ஆளுநா் பெருமிதம்

மருத்துவத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது; சா்வதேச தரத்தில் மருத்துவ சேவை அளிப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு தமிழகத்தை நாடுவது பெருமைக்குரிய விஷய... மேலும் பார்க்க