செய்திகள் :

பூட்டிய வீட்டில் திருட்டு: இளைஞா் கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஏழுமலை மனைவி மதுராம்பாள் (30). இவா், செவ்வாக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றாா். மாலையில் மதுராம்பாள் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுடன், வீட்டினுள்ளே மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் திருமால் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அத்தியந்தல் கூட்டுச் சாலையில் போலீஸாரைக் கண்டதும் இளைஞா் ஒருவா் தப்பி ஓடியுள்ளாா். அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், செல்லங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் ரமணா (20) என்பதும், மதுராம்பாள் வீட்டில் திருட்டில் ஈடுபட்டவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் பதுக்கி வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மணலூா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்து, ரமணாவை கைது செய்தனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க