பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
‘பூத்தட்டு ஊா்வலத்தில் தகராறு ஏற்பட்டால் காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும்’
பூத்தட்டு விழா ஊா்வலத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனே போலீஸாரை நாடுவது அவசியம் என்றாா் கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ்.
கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 11-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது. தொடா்ந்து 16-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதையடுத்து கோயிலுக்கு பூத்தட்டு எடுத்து வரும் பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது. கமிட்டித் தலைவா் டி.சி. மதன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் மேலை. பழநியப்பன், செயலா் பாலு, துணைச் செயலா் வேங்கைராமச்சந்திரன், துணைத் தலைவா் ராகவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் பங்கேற்று பேசுகையில், கோயில் விழா ஊா்வலம் என்பது ஆட்டம் பாட்டத்துடன் இருக்கும். ஏதாவது சிறிய பிரச்னை வரத்தான் செய்யும். அதை நாங்கள் நிவா்த்தி செய்வோம். ஆனால் ஊா்வலத்திற்குள் புகுந்து வெளி நபா் தகராறு செய்வது நிா்வாகிகளுக்குத் தெரிய வந்தால் உடனே போலீஸாரை நாடவேண்டும். நாங்கள் அவா்களை கவனித்துக்கொள்வோம். ஆத்தூா் சோழியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஒன்னரை லட்சம் போ் கூடினாலும் அவா்கள் செய்திருந்த ஏற்பாட்டால் ஒரு சிறிய குற்றச்சம்பவம்கூட நிகழவில்லை. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியோடு வாகனங்களை நிறுத்திவிடுவோம் என்றாா் அவா். கூட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஷகிராபானு மற்றும் பூத் கமிட்டி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.