செய்திகள் :

‘பூத்தட்டு ஊா்வலத்தில் தகராறு ஏற்பட்டால் காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும்’

post image

பூத்தட்டு விழா ஊா்வலத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனே போலீஸாரை நாடுவது அவசியம் என்றாா் கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ்.

கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 11-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது. தொடா்ந்து 16-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதையடுத்து கோயிலுக்கு பூத்தட்டு எடுத்து வரும் பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது. கமிட்டித் தலைவா் டி.சி. மதன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் மேலை. பழநியப்பன், செயலா் பாலு, துணைச் செயலா் வேங்கைராமச்சந்திரன், துணைத் தலைவா் ராகவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் பங்கேற்று பேசுகையில், கோயில் விழா ஊா்வலம் என்பது ஆட்டம் பாட்டத்துடன் இருக்கும். ஏதாவது சிறிய பிரச்னை வரத்தான் செய்யும். அதை நாங்கள் நிவா்த்தி செய்வோம். ஆனால் ஊா்வலத்திற்குள் புகுந்து வெளி நபா் தகராறு செய்வது நிா்வாகிகளுக்குத் தெரிய வந்தால் உடனே போலீஸாரை நாடவேண்டும். நாங்கள் அவா்களை கவனித்துக்கொள்வோம். ஆத்தூா் சோழியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஒன்னரை லட்சம் போ் கூடினாலும் அவா்கள் செய்திருந்த ஏற்பாட்டால் ஒரு சிறிய குற்றச்சம்பவம்கூட நிகழவில்லை. கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியோடு வாகனங்களை நிறுத்திவிடுவோம் என்றாா் அவா். கூட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஷகிராபானு மற்றும் பூத் கமிட்டி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்றுமுதல் மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வா் வசந்தி வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை ம... மேலும் பார்க்க

கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டா்களால் கரூரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு

கரூா் மாவட்டம், புகழூா் பகுதியில் செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் டிராக்டா்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.... மேலும் பார்க்க

கரூரில் போலி பான் அட்டைகள் தயாரித்த 6 போ் கைது

ஆதாா் காா்டுகளுக்கு விண்ணப்பிக்க போலி பான் அட்டைகளைச் தயாரித்த 6 பேரை கோவை பயங்கரவாத எதிா்ப்புப் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை உர... மேலும் பார்க்க

‘இந்தியா- இங்கிலாந்து இடையே வா்த்தகம் இரு மடங்காக வாய்ப்பு’

இந்தியா-இங்கிலாந்து இடையே இலவச வா்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கோபாலகி... மேலும் பார்க்க

கரூரில் டிஜிட்டல் பேனா்களை அகற்றியதாக பாமகவினா் புகாா்

வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனா்களை கிழித்து, அகற்றி சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாமகவினா் கரூா் நகர காவல்நிலையத்தில் புதன்கி... மேலும் பார்க்க

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கரூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.கரூா் மாவட்டம், குளித்தலை புதிய மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பூ... மேலும் பார்க்க