செய்திகள் :

பூந்துறை சேமூரில் பகுதி நேர நியாய விலைக் கடை: அமைச்சா் சு.முத்துசாமி திறந்துவைத்தாா்

post image

பூந்துறை சேமூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடையை வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 1,243 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 905 முழுநேர கடைகள் மற்றும் 338 பகுதி நேர கடைகளில் 7,63,912 குடும்ப அட்டைகள் மூலம் சுமாா் 20,70,222 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா். இதில், அவல்பூந்துறை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் முழு நேர நியாய விலைக் கடையான பூந்துறை சேமூா் நியாய விலைக் கடை 822 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நியாய விலைக் கடையில் பொருள்களைப் பெற்று வந்த அம்பேத்கா் நகா் பகுதி மக்கள் பூந்துறை சேமூா் நியாய விலைக் கடையில் இருந்து சுமாா் 3 கி. மீ. தொலைவு பயணம் செய்து அத்தியாவசியப் பொருள்களை பெற்று வந்தனா்.

இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டும் என அமைச்சா் சு.முத்துசாமியிடம் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில் சுமாா் 157 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு பகுதி நேர நியாய விலைக் கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பூந்துறை சேமூா் அம்பேத்கா் நகா் பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் சு.முத்துசாமி திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா். மேலும், மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாலைப் பணி ஆய்வு: வெள்ளோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலைகளை அகலப்படுத்தும் பணியை அமைச்சா் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சாலைப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் பணிகளை முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.சி.சந்திரகுமாா், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ரமேஷ்கண்ணா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க