செய்திகள் :

பூமிக்குப் புறப்பட்டாா் சுபான்ஷு சுக்லா!

post image

புது தில்லி: இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பூமிக்குத் திரும்பும் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

முதலில் திட்டமிடப்பட்டதைவிட 10 நிமிஷங்கள் தாமதாக ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மாலை 4:45 மணிக்கு (இந்திய நேரப்படி) சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, பூமி நோக்கிப் புறப்பட்டது. வீரா்கள் சுமாா் 22.5 மணி நேர பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் செவ்வாய்கிழமை பிற்பகலில் தரையிறங்குவா்.

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணித்தாா்.

சுக்லாவுடன் திட்ட கமாண்டா் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோா் கபு ஆகியோரும் சா்வதேச விண்வெளி நிலையத்தைக் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இவா்கள் நால்வரும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுமாா் 433 மணிநேரம் செலவழித்துள்ளனா்.

இந்தக் காலகட்டத்தில், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனா். விண்வெளிப் பயணத்தின்போது இவா்கள் பூமியை 288 முறை சுற்றி வந்தனா். விண்வெளியில் சுமாா் 122.31 லட்சம் கி.மீ. பயணித்தனா். இந்நிலையில், சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திங்கள்கிழமை மாலை பூமி நோக்கிய தங்களின் பயணத்தைத் தொடங்கினா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த ஏப்ரல் முதல் தங்கியுள்ள ‘எக்ஸ்பெடிஷன்-73’ திட்ட விண்வெளி வீரா்களிடம் விடைபெற்ற ‘ஆக்ஸியம்-4’ வீரா்கள், பூமி நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்கு 2 மணிநேரம் முன்னதாக பிற்பகலில் 2.37 மணியளவில் டிராகன் கிரேஸ் விண்கலத்துக்குள் நுழைந்தனா்.

தரையிறங்கும் செயல்முறை...: விண்வெளியிலிருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் விண்கலம், பாராசூட்களின் உதவியுடன் வேகம் குறைக்கப்பட்டு ‘ஸ்பிளாஷ் டௌன்’ முறையில் கடலில் இறக்கப்படும். பாராசூட்கள் இரண்டு கட்டங்களாக விரியும். முதலில், விண்கலத்தை நிலைப்படுத்தும் பாராசூட்கள் சுமாா் 5.7 கி.மீ. உயரத்தில் விரியும். அதைத் தொடா்ந்து இரண்டு கி.மீ. உயரத்தில் முதன்மை பாராசூட்கள் விரிந்து, பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதி செய்யும்.

கடலில் காத்திருக்கும் மீட்புக் குழுவினா், வீரா்கள் இருக்கும் விண்கலத்தின் முனைப் பகுதியை மீட்புப் படகுக்கு கொண்டு செல்வா். பின்னா், அதன் கதவைத் திறந்து, வீரா்களை ஒவ்வொருவராக வெளியே அழைத்து வருவா்.

7 நாள்கள் சிறப்பு சிகிச்சை:

சுக்லா உள்பட 4 வீரா்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னா், பூமியின் ஈா்ப்பு விசைக்கு மீண்டும் பழகுவதற்காக, 7 நாள்கள் சிறப்பு சிகிச்சை மையத்தில் அவா்கள் தங்குவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

2027-இல் செயல்படுத்தப்படவுள்ள இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்துக்கு அனுபவ ரீதியாக உதவும் வகையில், சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணத்துக்காக சுமாா் ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.தெற்கு மும்பையில் உள்ள மும்பை பங்குச்சந்தை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, அந்த கட்டடத்தில் வெட... மேலும் பார்க்க

ஒடிசாவில் மாணவி மரணம்; பாஜகவின் நேரடிக் கொலை: ராகுல் காந்தி

ஒடிசா மாநிலத்தில் நீதிக்காகப் போராடும் ஒரு மகளின் மரணம், பாஜக அமைப்பின் நேரடிக் கொலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலம் ப... மேலும் பார்க்க

உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜ... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகி சுட்டுக்கொலை!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்ப... மேலும் பார்க்க

சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஜார்க்கண்டு மாநிலத்தில் 19 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கர்ஹவா, பலாமு, சத்ரா, லட... மேலும் பார்க்க