செய்திகள் :

பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி

post image

புதுதில்லி: பெங்களூரில் வீட்டுச் சந்தை வலுவாக உள்ளதாகவும், ஜூலை முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் அதன் விற்பனை 21 சதவிகிதம் அதிகரித்து சுமார் 16,840 வீடுகள் விற்பனையாகும் என்றது ப்ராப் ஈக்விட்டி.

ரியல் எஸ்டேட் தரவு நிறுவனமான ப்ராப் ஈக்விட்டி, தரவுகளின் அடிப்படையில், 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் குடியிருப்பு விற்பனை 49,559 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக தெரிவித்தது. இதுவே அதன் முந்தை ஆண்டு இதே காலத்தில் வீடுகளின் விற்பனை 46,392ஆக இருந்தது.

பண்டிகைக் காலம் தொடங்குவதால், ஆண்டின் நான்காவது காலாண்டில் பெங்களூருவில் விற்பனை உயரும் என்று கருதும் நிலையில், 2024ல் வீடுகளின் விற்பனை 61,116ஆக இருந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு இது 66,600 வீடுகளாக இருந்தது என்றது.

கோவிட் தொற்றுநோய் காலத்தில் (2020), வீடுகளின் விற்பனை 34,480 ஆக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தேவை அதிகரிபால் சந்தை மீண்டும் எழுந்தது.

2021ல் வீடுகளின் விற்பனை 43,181ஆக இருந்த நிலையில், 2022ல் அது 60,391 வீடுகளாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்

ஐபோனுக்கு போட்டியாக ஒன்பிளஸ் 15..! விலை, வெளியீடு, சிறப்பம்சங்கள் என்ன?

கேமிராவுக்கு என புகழ்ப்பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் 'ஒன்பிளஸ் 15’ என்ற புதிய ஸ்மார்ட்போன் ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமாகவிருக்கிறது. இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளை உரு... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்

கொல்கத்தா: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதித வரி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிசில்) தனது செ... மேலும் பார்க்க

ஈவுத்தொகையாக ரூ.3,248 கோடி அரசுக்கு செலுத்திய என்டிபிசி!

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனமானது 2024-25 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.3,248 கோடியை அதன் நிர்வாக மின் அமைச்சகத்திற்கு வழங்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிறுவனம் மேல... மேலும் பார்க்க

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 7% சரிவு!

புதுதில்லி: சூரிய சக்தி தகடுகள் இறக்குமதி மீதான வரி ஏய்ப்பு தொடர்பாக அமெரிக்க நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, உள்ளூர் வர்த்தகத்தில் வாரீ எனர்ஜிஸின் பங்குகள் கிட்டத்... மேலும் பார்க்க

வோடபோன் ஐடியா பங்குகள் 8% சரிவுடன் நிறைவு!

புதுதில்லி: 2016-17 வரையிலான காலகட்டத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கைகளை ரத்து செய்யக் கோரிய நிறுவனத்தின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை... மேலும் பார்க்க

முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரித்து விரைவாக தீர்வு காண்பதற்கான சில விதிமுறைகளை பின்பற்றாத முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர... மேலும் பார்க்க