செய்திகள் :

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

post image

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் சிங் என்பவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் இதுதொடர்பாக விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த லோக்நாத் சிங்கிற்கு அவரது மனைவி உணவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமான நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் தொண்டைப் பகுதியில் அறுத்து கொலை செய்துள்ளார். அந்த பெண்ணின் தாயாரும் இதற்கு உதவி புரிந்துள்ளார்.

தன் கணவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். லோக்நாத்தின் மனைவி மற்றும் மாமியாரை கைது செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது மனைவி கூறியபடி, மோசடி வழக்கு தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவின் கண்காணிப்பில் லோக்நாத் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

பெண் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்தபோது,

லோக்நாத் மற்றொரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். வயது வித்தியாசம் அதிகமிருந்ததால் லோக்நாத்தின் குடும்பத்தினர் அவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் லோக்நாத்துக்கும் தாங்கள் பார்த்த பெண்ணுக்கும்(லோக்நாத்தின் மனைவி) குடும்பத்தினர் திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணம் முடிந்ததுமே மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்றுள்ளார் லோக்நாத். இதன்பின்னரே அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு லோக்நாத் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன. இதுபற்றி கேட்கும்போது லோக்நாத், தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக லோக்நாத்தின் மனைவி அவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

எனினும் கணவனை மனைவி மற்றும் அவரின் தாயார் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | 'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்யுள்ளார். மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர்... மேலும் பார்க்க