செய்திகள் :

பெங்களூரு: அதிகாலையில் நடைப்பயிற்சி செய்த முதியவர்; கடித்துக் கொன்ற தெரு நாய்கள்; என்ன நடந்தது?

post image

பெங்களூருவில் முதியவர் ஒருவரை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் உள்ள கொடிகேகல்லி என்ற இடத்தில் வசித்தவர் சீத்தப்பா (70). இவர் இரவில் சரியாக உறக்கம் வராமல் திணறிக்கொண்டிருந்தார்.

இதனால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்று வரலாம் என்று நினைத்து சீத்தப்பா தனது வீட்டை விட்டு வெளியில் வந்தார். அவரது வீட்டிற்கு வெளியில் தெருநாய்கள் அதிக அளவில் நின்று கொண்டிருந்தன.

தெரு நாய்கள்
தெரு நாய்கள்

அவர் வெளியில் வந்த நேரத்தில் இருட்டு அதிகமாக இருந்தது. சீத்தப்பா வந்தவுடன் தெரு நாய்கள் அவரைச் சுற்றி வளைத்துத் தாக்க ஆரம்பித்தன. இதனால் உதவி கேட்டு சீத்தப்பா கத்தினார். வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.

வெளியில் தெரு நாய்கள் சீத்தப்பாவைச் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தன. அவற்றை அடித்து விரட்டிவிட்டு சீத்தப்பாவை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சீத்தப்பாவின் உடம்பில் நாய்க் கடிகளால் கைகள், கால்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது, சதைப் பகுதிகள் கிழிந்தன. இதனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற்னார். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து என்ன நடந்தது என்பதை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் சுற்றித்திருந்த 15 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். கடந்த வாரம்தான் கர்நாடகாவின் ஹூப்லியில் 3 வயது சிறுமியை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறியது.

நாய்

இதில் சிறுமி படுகாயம் அடைந்தார். பெங்களூருவில் தெரு நாய்களுக்கு சிக்கன் சாப்பாடு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தினமும் 4 முதல் 5 ஆயிரம் தெரு நாய்களுக்குச் சமைத்த சிக்கன் சாப்பாடு வழங்கப்படும். இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நீலகிரி: பழங்குடி மாணவருக்கு ராகிங் தொல்லை, 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின இளைஞர் ஒருவர் கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் இந... மேலும் பார்க்க

உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? - மலைவாழ் மக்கள் சொல்வதென்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா க... மேலும் பார்க்க

"நானும் கவினும் உண்மையா காதலிச்சோம்; தவறா பேசாதீங்க" - நடந்ததை விவரிக்கும் கவின் காதலி

திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் என்பவரை, காவல்துறை அதிகாரிகளான சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனும். கவினின் காதலியின் சகோதரருமான சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கொடூரமாக ஆணவக்கொலை செய்த ... மேலும் பார்க்க

`நெல்லை கவின் ஆணவக்கொலை' - எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை சொல்வதென்ன?

"நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது." என்று எவிடெ... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை; இளைஞரைக் கொன்று எரித்த நண்பர்கள்... கோவையில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் க... மேலும் பார்க்க