செய்திகள் :

பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!

post image

பெங்களூருவில் வேலையைத் துறந்து வீட்டிற்குத் திரும்பியதால், பழிக்கப்பட்ட இளைஞர், விவசாயத்தை தொழிலாக மேற்கொண்டு அதில், ரூ. 2.5 கோடி வருவாய் ஈட்டி வருகிறார்.

பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த பி.எஸ்சி பட்டதாரியான பிரின்ஸ் சுக்லா, பெங்களூருவில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், அந்த வேலையைத் துறந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

மாத ஊதியம் அளிக்கும் வேலையைத் துறந்ததால், அவரின் குடும்பத்தார் உள்பட உறவினர்கள் பலரும் அவரை தரக்குறைவாகப் பேசியுள்ளனர். ஆனால், இதனால், அவர் மனம் தளரவில்லை.

விவசாயத் துறை பட்டதாரியான சுக்லா, தனது தந்தையிடம் ரூ. 1 லட்சம் வாங்கி சொந்தமாக விவசாயத் தொழில் தொடங்கியுள்ளார்.

அக்ரேட் என்ற புத்தாக்க (ஸ்டார்ட்அப்) நிறுவனத்தைத் தொடங்கி, விவசாயிகளுக்கு தரமான விதைகள், இயற்கை உரங்கள், திறன் வாய்ந்த நீர்ப்பாசனக் கருவிகள் போன்றவற்றை வழங்கி வந்துள்ளார். அதோடு மட்டுமின்றி சிறிய அளவிலான விவசாயம் மேற்கொள்ள பயிற்சியையும் இவர் வழங்கிவந்துள்ளார்.

இது குறித்து பிரின்ஸ் சுக்லா கூறியதாவது,

''விவசாயத் துறையில் சொந்தமாகத்தொழில் தொடங்கி, ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்தேன். ஆனால், தொடர் கடின உழைப்பால், தற்போது இதில் வெற்றி அடைந்துள்ளேன். இன்று, அக்ரேட் நிறுவனம் ரூ. 2.5 கோடி ஆண்டு வருவாய் ஈட்டுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 10 கோடி.

முன்பு இருந்த விவசாய முறையில் சிக்கல்களை சந்தித்து சிரமத்திற்குள்ளான விவசாயிகள் கூட, நவீன கருவிகளாலும், சிறந்த நுட்பங்களாலும் பலன் அடையத் தொடங்கியுள்ளனர்.

விவசாயத்தை குடும்ப பாரமாக நினைத்த பலரும், அதனைப் பெருமையாக நினைக்கத் தொடங்கியுள்ளனர். பெங்களூருவில் வேலையைத் துறந்து வந்தபோது என்னைத் திட்டியவர்கள் என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர். இதை, என் கடின உழைப்புக்கு கிடைத்த மரியாதையாகப் பார்க்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!

After quitting his job in Bengaluru, the slandered youth has taken up farming as a profession and is earning Rs. 2.5 crore.

கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!

கர்நாடகத்தில் மாரடைப்பால் அதிகம் பேர் மரணமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் 40 நாள்களில் 23 பேர் மாரடைப... மேலும் பார்க்க

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில், இந்த நிலையில்,... மேலும் பார்க்க

அவசரநிலை, இந்திரா காந்தியை விமர்சித்த சசி தரூர்!

அவசரநிலை காலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவனந்தபுரம் மக... மேலும் பார்க்க

மனைவி மீது சந்தேகம்! குழந்தைக்கு டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது

மும்பை: கணவருக்கு, தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், விதிவிலக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழைக்கு 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் லாகூர், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றியுள்ள மாவட்டங்கள், பலுசிஸ்தானின் சில பகு... மேலும் பார்க்க

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க