செய்திகள் :

``பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்லாமல் இருந்தால்..." - சர்ச்சையான காவல்துறையின் அறிவிப்பு

post image

குஜராத் மாநிலத்தில் பூபேந்திர் படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. குஜராத் மாநில காவல்துறை பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சோலா, சந்த்லோடியா பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில், ``பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள். நீங்கள் பாலியல் வன்கொடுமையோ அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமையோ செய்யப்படலாம்" , ``உங்கள் நண்பர்களுடன் இருண்ட, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாதீர்கள். தனிமையில் உங்களை பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வீர்கள்?" போன்ற கேள்விகள் அதில் இடம்பிடித்திருந்தன.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

இந்த சுவரொட்டிகள் சமூக ஊடகங்களில் பரவி கடும் விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த காவல்துறை தரப்பு, ``சதார்க்தா குழுமம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்த நிறுவனம் எங்களை அணுகி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவதாகவும், காவல்துறை அதிகாரிகளை அதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டது. போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டிகள் எங்களுக்குக் காட்டப்பட்டன.

ஆனால் இதுபோன்ற சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் எங்களுக்குக் காட்டப்படவில்லை. மேலும் எங்கள் அனுமதியின்றியே அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. புகார் வந்தற்குப் பிறகு அந்த சுவரொட்டிகளை அகற்றிவிட்டோம்.'' என்றார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய குஜராத் ஆம் ஆத்மி கட்சி, ``குஜராத்தில் உள்ள பா.ஜ.க அரசு பெண்களுக்கு அதிகாரமளிப்பது பற்றிப் பேசுகிறது. ஆனால் கள யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது.

சுவரொட்டிகள்
சுவரொட்டிகள்

கடந்த மூன்று ஆண்டுகளில், குஜராத்தில் 6,500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் 36-க்கும் மேற்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளன. ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் பதிவு செய்யப்படுகிறது. முதலமைச்சரும் பா.ஜ.க தலைவர்களும் பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இன்று அகமதாபாத் போன்ற ஒரு பெரிய நகரத்தில், இந்த சுவரொட்டிகள் குஜராத்தின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. குஜராத் பெண்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமா இல்லையா என்பதுதான் முதல்வரிடம் எங்கள் கேள்வி?" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

தனி கொடி, நாணயம்... 125 ஏக்கர் காட்டுப் பகுதியை ஒரு புதிய நாடாக உருவாக்கிய 20 வயது இளைஞர் - எப்படி?

பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்பவர் தான் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ... மேலும் பார்க்க

இறந்த அம்மாவின் வங்கி கணக்குக்கு திடீரென கிரெடிட்டான பல கோடி ரூபாய் - அதிர்ச்சியில் உறைந்த மகன்

உத்திர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த 20 வயது இளைஞரான தீபக் என்பவர் பயன்படுத்தும் வங்கி கணக்கில் திடீரென 37 இலக்கங்களில் (10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299) ஒரு பெரிய தொகை வந்ததைக்... மேலும் பார்க்க

Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ஆகஸ்ட் 4 ரவுண்ட்அப்

* தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் ரூ. 32,554 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானத... மேலும் பார்க்க

ஏர் இந்திய விமானத்தில் கரப்பான் பூச்சித்தொல்லை; விமானத்தை நிறுத்தி மருந்தடித்த ஊழியர்கள்!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு இன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம் இந்தியாவை நெருங்கியபோது விமானத்தில் கரப்பான் பூச்சி ஆங்காங்கே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.இரண்ட... மேலும் பார்க்க

Eng v Ind : `டெஸ்ட் போட்டினா இதுதான்.!’ - இந்தியாவின் த்ரில் வெற்றியின் திக் திக் மொமென்ட்ஸ் | Album

Eng v Ind | இந்தியாEng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind E... மேலும் பார்க்க

Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழும் தம்பதி - எப்படி?

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைகளுக்கான செலவுகள் அதிகப்படியாக உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி எல்லா பொருள்களின் விலைகளும் அதிகமாகி வருகிறது. ஒரு குடும்பத்தை நடத்துவது என்றாலே அதற்கான செலவுகள் ... மேலும் பார்க்க