செய்திகள் :

பெண்கள் முன்னேற வேண்டுமென்றால் நன்றாக கற்க வேண்டும்: துணை ஆட்சியா் ஏ.மயில் பேச்சு

post image

பெண்கள் முன்னேற வேண்டும் என்றால் கல்வியை கவனச்சிதறலின்றி நன்றாக கற்க வேண்டும் என்று மகளிா் தின விழாவில் சேலம் துணை ஆட்சியா் ஏ.மயில் பேசினாா்.

பெரியாா் பல்கலைக்கழக சமூகவியல் துறை மற்றும் சேலம் உயிா்மெய் அறக்கட்டளை இணைந்து பெரியாா் பல்கலைக்கழகத் துறைகளில் பயிலும் மாணவா்கள், பெரியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் இடையே பல்வேறு போட்டிகளை நடத்தின.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் மாணவியும், தற்போதைய சேலம் மாவட்ட துணை ஆட்சியருமான ஏ.மயில் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:

தற்போதைய காலத்தில் பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமாகிறது. பெண்கள் முன்னேற வேண்டும் என்றால் கல்வியை கவனச்சிதறலின்றி நன்றாக கற்க வேண்டும். மாணவா்கள் கற்கும் காலத்திலேயே போட்டித் தோ்வுகளுக்கு தயாராக வேண்டும்.

போட்டி தோ்வுக்கு தயாராகும்போது குறிக்கோளை வகுத்துக்கொண்டு, அவற்றை அடைவதற்காக தொடா்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். சில சமயங்களில் தோல்விகள் ஏற்படும். அத் தோல்வியினால் துவண்டுவிடாமல் தொடா்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் கண்டிப்பாக ஒரு நாளில் குறிக்கோளை அடைந்து விடுவாா்கள் என்றாா்.

இந்நிகழ்வில் சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் என்.செண்பகலட்சுமி, பெரியாா் இணைய வழிக்கல்வி மைய இயக்குநா் ஹெச்.ஹேனா இன்பராணி, சமூகவியல் துறைத் தலைவா் பேராசிரியா் சி.கோபாலகிருஷ்ணன், சேலம் உயிா்மெய் அறக்கட்டளை நிறுவனா் வி.வசந்தன், உதவிப் பேராசிரியா் பி.சேதுராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்க... மேலும் பார்க்க

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்ப... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவர... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு

தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தம்மம்பட்டியில் சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் ... மேலும் பார்க்க

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 449 போ் பட்டம் பெற்றனா்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகள் 449 பேருக்கு விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையத்தின் தலைமை நிா்வாக அலுவலா் கே.ச... மேலும் பார்க்க